![]()
திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி 50 வது ஆண்டு பொன்விழாவையொட்டி விழாகோலம் பூண்டுள்ளது. இன்று 23 தேதி துவங்கி 3 நாட்கள் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. பொன்விழாவையொட்டி சித்தம் 50 என்ற மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வர்மம் மற்றும் யோகம், சித்த மருத்துவ உணவு முறைகள், மனித உறுப்பு கண்காட்சி, 500 மூலிகைகளின் கண்காட்சி உள்ளிட்ட 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.