நெல்லை ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வெள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் (வயது 28). இவரை ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு ஒரு வேனில் அழைத்து வந்தனர். அவருடன் பாதுகாப்புக்காக 2 போலீசார் வந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற போது, திடீரென்று ஆறுமுக நயினார் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.