நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறித் தொழிலாளர்கள், கஞ்சித் தொட்டி திறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 35% ஊதிய உயர்வு கோரி பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள், கடந்த 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 8 நாட்களாக நீடித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகமோ, அரசோ தங்களை கண்டுகொள்ளாத நிலையில், சுமார் 10 இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.