ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டை தாலூகா அலுவலகம் அருகில் நகர இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னனி நகரத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செங்கோட்டை ஒன்றியத்தலைவர் மாசாணம், பொதுச்செயலாளர் சந்தைகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் சிவமுருகன், சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி நகரத்தலைவர் மாரியப்பன், நகரச்செயலாளர் சீனிவாசன், நகரத்துணைத்தலைவர் அருணாச்சலம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.