வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.பார்வையிட்டார்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,பட்டியலில் திருத்தங்கள் உள்ளிட்ட சிறப்பு முகாம் கீழப்பாவூர் ,சிவகாமிபுரம்,பட்டமுடையார்புரம் ,பெத்தநாடார் பட்டி ,கருமனூர் உள்ளிட்ட கீழப்பாவூர் ஒன்றியம் முழுவதும் நடைபெற்ற முகாமினை நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பணியில் உள்ள அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டறிந்தார்
இதுகுறித்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., கூறியதாவது
தமிழ்நாட்டில் 2016ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது ,இந்த மாதமும் அடுத்த மாதம் 4 ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அந்த நேரத்தில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்களர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம்களில் கொடுத்தால் பெயர்கள் சேர்க்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது ,எங்கள் தலைமையின் உத்தரவின் படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள கட்சியினரும் மக்களை தொடர்பு கொண்டு பட்டியலை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது இதையடுத்து வீடு வீடாக எங்கள் கட்சியினர் விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்இதுகுறித்து கட்சியினர் ஆலோசனைகள் நடத்தி வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார் உடன் மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,மேலவைபிரதிநிதிகள்ஜெயராமன்,கணபதி,அம்மாபேரவை சாமிநாதன் ,இளைஞரணி இருளப்பன் ,சுரேஷ் லிகோரி ,கப்பல்,இசக்கியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
கீழப்பாவூர் செ.பிரமநாயகம்