![கின்னஸ் ரெக்கார்டு புக்கில் சேர இருக்கும் குண்டூர் சிறுமி! 1 IMG 20210327 WA0022](https://dhinasari.com/wp-content/uploads/2021/03/IMG-20210327-WA0022.jpg)
கின்னஸ் ரெக்கார்டு புக்கில் சேர இருக்கும் குண்டூர் சிறுமி.
அற்புதமான திறமையை வெளிப்படுத்திய ஒன்பது வயது சிறுமி கின்னஸ் உலக ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெறப் போகிறார்.
குண்டூர் மாவட்டம் சிலகலூரிபேட்டையை சேர்ந்த ஒன்பது வயது ஃபசீலா தபஸ்ஸும் என்பவர் ஆவர்த்தன பட்டியல் எனப்படும் கனிம மூலகங்களின் அட்டவணையை மிகக் குறைந்த நேரத்தில் அமைத்து கின்னஸ் புத்தக பிரதிநிதிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். விரைவிலேயே இந்த சிறுமியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
இதுவரையிலேயே இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இவர் இடம்பெற்றுள்ளார்.
குண்டூர் எம்எல்ஏ விடதல ரஜினியின் முன்னிலையில் 1.27 நிமிடங்களிலேயே தனிம மூலகங்களை அமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஃபசீலா. இதுதொடர்பாக சிறுமியை எம்எல்ஏ பாராட்டினார்.