4 ஓவர், 3 மெய்டன், 2 ரன், 2 விக்கட் சாய் கிஷோர் சாதனை!

TNPL எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

tnpl - 2026
  • K.V. பாலசுப்ரமணியன்

TNPL எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

அந்தப் போட்டிகளில் கடந்த 22 ஜூலை 2022 அன்று நடைபெற்ற சேப்பாக்கம்-திருப்பூர் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஒரு சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் சேப்பாக்கம் கில்லீஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளரான சாய் கிஷோர் 4 ஓவர்கள் பந்து வீசி, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார். அதாவது அவர் வீசிய 24 பந்துகளில் 22 பந்துகள் ரன் எதுவும் தராமல் வீசப்பட்டுள்ளது. மூன்று ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த டி20 வரலாற்றில் 2018ஆம் ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டி ஒன்றில் பார்படாஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய ஒரு பாகிஸ்தான் வீரர் (முகம்மது இர்பான்) 4 ஓவர்கள் வீசி, 3 மெய்டன்கள், ஒரு ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கட் எடுத்தார். அதன்பிறகு சாய் கிஷோர் செய்திருப்பதே சாதனை.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.