― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்பொய்யான சான்றிதழ் காட்டி 14 வயது சிறுமியை மணந்த நபர்! போலீசாரால் கைது!

பொய்யான சான்றிதழ் காட்டி 14 வயது சிறுமியை மணந்த நபர்! போலீசாரால் கைது!

தஞ்சாவூர் அருகே சிறுமியைத் திருமணம் செய்த நபரை காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (38). இவர் தஞ்சாவூர் நகரிலுள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியைக் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள கோயிலில் 2019, செப். 14-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர். இதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அச்சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டு, போலியாக வயது சான்றிதழ் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பால்ராஜ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version