சொத்துக்களை பெறுகிற யோகம் என்பதும், அதை ஆண்டு அனுபவிக்கும் யோகம் என்பதும் முக்கியம். சிலருக்கு சொத்துக்கள் இருந்தாலும் அதை கடைசிவரை அவர்களால் அனுபவிக்க முடியாமல் இருக்கும். சொந்த ஊரில் திரண்ட சொத்துக்களை சேகரித்து வைத்து விட்டு அயல்நாடுகளில் பணிநிமித்தம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலருக்கு சொந்த வீட்டிருந்தாலும் வாடகை வீட்டிலேயே வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கும். சிலருக்கோ கை நிறைய பணம் இருந்தாலும் வீடு வாங்கவோ, சொத்து சுகங்களை வாங்கவோ முடியாமல் இருக்கும். இதற்கெல்லாம் கிரகங்கள்தான் காரணம்.
சிலர் சொத்துக்களை வாங்கினாலும் அதை கடைசி வரை வைத்துக் கொள்ள முடியாமல் இடையில் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு ஜோதிடத்தில் சில சூட்சும வழிமுறைகள் உள்ளது.