ஜெனிவா: இலங்கை இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யும் முயற்சி, செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பின்லாந்து முன்னாள் அதிபர் மார்ட்டி அஹ்டிசாரி தலைமையிலான சர்வதேச நிபுணர் குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள சிறீசேனா அரசு போர்க் குற்றங்கள் குறித்து புதிதாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இலங்கை அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப் படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக்கான ஐ.நா. தூதர் சையத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
விளையாட்டு
FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
விளையாட்டு
FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
இந்தியா
சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

