ஜெனிவா: இலங்கை இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யும் முயற்சி, செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பின்லாந்து முன்னாள் அதிபர் மார்ட்டி அஹ்டிசாரி தலைமையிலான சர்வதேச நிபுணர் குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள சிறீசேனா அரசு போர்க் குற்றங்கள் குறித்து புதிதாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இலங்கை அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப் படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக்கான ஐ.நா. தூதர் சையத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
Hot this week
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
அரசியல்
‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
ஆன்மிகச் செய்திகள்
பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!
ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
அரசியல்
‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
ஆன்மிகச் செய்திகள்
பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!
ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?
காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

