ஜெனிவா: இலங்கை இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யும் முயற்சி, செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பின்லாந்து முன்னாள் அதிபர் மார்ட்டி அஹ்டிசாரி தலைமையிலான சர்வதேச நிபுணர் குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள சிறீசேனா அரசு போர்க் குற்றங்கள் குறித்து புதிதாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இலங்கை அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப் படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக்கான ஐ.நா. தூதர் சையத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
மதுரை
ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
உரத்த சிந்தனை
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!
தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
மதுரை
ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
உரத்த சிந்தனை
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!
தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!
ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....
சற்றுமுன்
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.
உரத்த சிந்தனை
தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!
பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

