சென்னை: பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சன் டிவி முன்னாள் ஊழியர்கள் மூவரின் ஜாமீன் மனு இன்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், மூவரிடம் இருந்தும் புதிய தகவல்கள் கிடைத்தன என்றும், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து, இவர்கள் வெளியில் வந்தால், சாட்சிகள் கலைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், இரண்டாவது முறையாக அவர்கள் மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Leave a Reply