பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வர்த்தக முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:-
இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் உள்ள கூட்டுறவு மிகப் பழமையானது. தொழில் முனைவோருக்கு இந்தியா சிறந்த களமாக இருக்கிறது இங்கு முதலீடு செய்து நன்மை பெற வாருங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும் அவர் பேசும் போது தென் கிழக்கு ஆசியாவின் வளர்ச்சி, மற்றும் உறுதிதன்மைக்கு நுண் பொருளாதார ஸ்திரத்தன்மையை முக்கிய காரணம். ஆசிய நாடுகளுக்கு என் தலைமையையும் மற்றும் எம் மக்களையும் பரிசளிக்கிறேன். இந்தியாவில் என் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 18 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த நேரத்தில் ஏராளமான சவால்களை இந்தியா சந்தித்துள்ளது. நாங்கள் எங்களையே ஒரு ஒரு கேள்வி கேட்டுக் கொண்டோம் – என்ன மறுசீரமைப்பு என்றால் என்ன..?
சீர்திருத்தத்தின் நோக்கம் என்ன? இந்த கேள்விகளுக்கு எங்களுக்கு கிடைந்த தெளிவான பதில்தான்.. எங்களின் உருமாற்றமே சீர்திருத்தம்..அதுவே இப்போதை முழுமையான எங்களின் தேவை. சீர்திருத்தம் என்பது நீண்ட பயணம். இந்த பயணத்தின்முடிவில் இந்தியா தன்னை முழுமையாக
உருமாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்தியாவின் மாற்றம் எனும் காற்றை சுவாசிக்க நான் உங்களை அழைக்கிறேன். காற்று எல்லையை கடக்க காலம் எடுத்துக்கொள்ளும். நான் உங்களை அழைக்கவே இங்கு வந்திருக்கிறேன். மேலும் இந்தியாவின் அறிவியலாளர்கள், அறிவுசார் சொத்துரிமை அனைத்தையும் பாதுகாக்க நான் உறுதி அளிக்கிறேன்.ஆசியான் வணிக மற்றும் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் மகத்தான வாய்ப்புகள் உள்ளன என்பதை இந்த மாநாட்டில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் பண மதிப்பு நிலையாக உள்ளது , நடப்புக்கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது, அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது, பண வீக்கம் குறைந்துள்ளது, பிற பெரிய நாடுகளை விட இந்தியா பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது என உலக வங்கி கூறியுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா மீதான நம்பிக்கை வளர்ந்துள்ளது.இன்சூரன்ஸ் திட்டம் துவக்கியுள்ளோம், அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கி கொடுத்துள்ளோம் , அனைவருக்கும் வீடு, மண் வள கார்டு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதே எங்களின் நோக்கம், இதற்கென மேக் இன் இந்தியா கொள்கை வகுத்துள்ளோம், இதன் மூலம் உற்பத்தி பெருகுவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி ஏற்படுகிறது இந்தியாவில் வர்த்தகம், பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. வர்த்தகம், பொருளாதாரம் முன்னேற்றமே எங்களின் இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Leave a Reply