கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி, மாமியார் உட்ப்பட 6 பேர் கைது

Published:

 

குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி மாமியார் உட்ப்பட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பேசின்பிரிட்ஜில் கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமியார்
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் செய்தியாளர்களிடம் கூறப்பட்டதாவது :-

பேசின்பிரிட்ஜ் தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர் வாடகை கார் ஓட்டி வந்தார். சீனிவாசன், பேசின்பிரிட்ஜ் மோதிலால் தெருவில் வியாழக்கிழமை இரவு நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சீனிவாசனை திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தினர். வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், சீனிவாசன் மனைவி நாகஜோதி (32), மாமியார் மல்லேஸ்வரி (62) ஆகிய இருவரும்தான் கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்து.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இதையடுத்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சீனிவாசன் தினமும் மது அருந்திவிட்டு வந்து நாகஜோதியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதும், இதனால் ஆத்திரமடைந்த நாகஜோதியும், மல்லேஸ்வரியும் சீனிவாசனை கொலை செய்ய அந்தப் பகுதியைச் சேர்ந்த கூலிப்படையை நாடியதும், அவர்கள் இருவரும் ஏவிய கூலிப்படையினர் சீனிவாசனை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

சீனிவாசனை கொல்வதற்காக ரூ.50 ஆயிரம் பேரம் பேசப்பட்டது. முன்பணமாக ரூ.20 ஆயிரம் பெற்று கொண்ட அப்பு தனது கூட்டாளிகளான மதன் (27), கருப்பு என்கிற ரகு (25) ஆகியோருடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு சீனிவாசனை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து சீனிவாசனின் மனைவி நாகஜோதி, மாமனார் நாகேஷ்வரன், மாமியார் மல்லேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பேசின்பாலம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடிகள் அப்பு, மதன், ரகு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img