கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி, மாமியார் உட்ப்பட 6 பேர் கைது

 

குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி மாமியார் உட்ப்பட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பேசின்பிரிட்ஜில் கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமியார்
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் செய்தியாளர்களிடம் கூறப்பட்டதாவது :-

பேசின்பிரிட்ஜ் தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர் வாடகை கார் ஓட்டி வந்தார். சீனிவாசன், பேசின்பிரிட்ஜ் மோதிலால் தெருவில் வியாழக்கிழமை இரவு நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சீனிவாசனை திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தினர். வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், சீனிவாசன் மனைவி நாகஜோதி (32), மாமியார் மல்லேஸ்வரி (62) ஆகிய இருவரும்தான் கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்து.

இதையடுத்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சீனிவாசன் தினமும் மது அருந்திவிட்டு வந்து நாகஜோதியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதும், இதனால் ஆத்திரமடைந்த நாகஜோதியும், மல்லேஸ்வரியும் சீனிவாசனை கொலை செய்ய அந்தப் பகுதியைச் சேர்ந்த கூலிப்படையை நாடியதும், அவர்கள் இருவரும் ஏவிய கூலிப்படையினர் சீனிவாசனை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

சீனிவாசனை கொல்வதற்காக ரூ.50 ஆயிரம் பேரம் பேசப்பட்டது. முன்பணமாக ரூ.20 ஆயிரம் பெற்று கொண்ட அப்பு தனது கூட்டாளிகளான மதன் (27), கருப்பு என்கிற ரகு (25) ஆகியோருடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு சீனிவாசனை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து சீனிவாசனின் மனைவி நாகஜோதி, மாமனார் நாகேஷ்வரன், மாமியார் மல்லேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பேசின்பாலம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடிகள் அப்பு, மதன், ரகு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories