
இன்றைய பஞ்சாங்கம் – டிச.,04
ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
கார்த்திகை ~ 18 (4.12.2025 )* வியாழன் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம் ~ கார்த்திகை மாஸம் { விருச்சிக மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 7.57 am வரை சதுர்த்தசி பின் பௌர்ணமி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 3.13 pm வரை க்ருத்திகை பின் ரோஹிணி
யோகம் ~ சிவம்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம்~ அசுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.20
சந்திராஷ்டமம் ~ துலாம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ பௌர்ணமி
இன்று ~ பௌர்ணமி / ஸர்வாலய தீபம் / ஶ்ரீ வைகானஸ தீபம்
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

இன்றைய ராசிபலன்கள்
04.12.2025
மேஷம்
எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்குகான அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : வாய்ப்பு உண்டாகும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
வீடு மாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயணங்கள் மூலம் புது விதமான அனுபவம் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். மகிழ்ச்சி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : கருத்துகளில் கவனம்.
மிதுனம்
திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
கடகம்
குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்
புனர்பூசம் : பொறுப்புக்கள் மேம்படும்.
பூசம் : மதிப்புகள் உயரும்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.
சிம்மம்
சமூக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்து மந்த தன்மை குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். மேன்மை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மகம் : பொறுப்புகள் மேம்படும்.
பூரம் : மந்த தன்மை குறையும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
கன்னி
குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
உத்திரம் : செலவுகள் உண்டாகும்.
அஸ்தம் : மாற்றம் ஏற்படும்.
சித்திரை : தேடல்கள் அதிகரிக்கும்.
துலாம்
சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : சோர்வுகள் உண்டாகும்.
விசாகம் : திருப்பங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
விசாகம் : புரிதல் உண்டாகும்.
அனுஷம் : உற்சாகம் உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.
தனுசு
செயல்களில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : தடைகள் விலகும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
மகரம்
குடும்பத்துடன் நேரங்களில் செலவழித்து மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மதிப்பளித்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
உத்திராடம் : புரிதல் அதிகரிக்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
கும்பம்
எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பாராட்டு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மீனம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
ரேவதி : ஆர்வம் உண்டாகும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்





ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•னம௠பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯