
இன்றைய பஞ்சாங்கம் – செப்.26
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்~புரட்டாசி ௴ 9 ௨ { 26.9.2023}
*1.வருடம் ~ ஸோபகிருது வருடம். { ஸோபகிருது நாம ஸம்வத்ஸரம்}
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்
3.ருது ~, வர்ஷ ருதௌ .4.மாதம் ~( கன்யா மாஸம்)
5.பக்ஷம் ~ ஸுக்ல பக்ஷம் 6 ஸ்ரார்த்த திதி துவாதசி இரவு 11.24 AM வரை பிறகு திரயோதசி
7.நாள்~ செவ்வாய் கிழமை { பௌம வாஸரம் }
8.நக்ஷத்திரம் காலை 7.34 Am வரை ஸ்ரவணம் பிறகு ஸ்ரவிஷ்டா
9 யோகம் ( காலை 7.34 வரை ஸுப யோகம் பிறகு யோகம் சரியில்லை)
- நல்ல நேரம் காலை 8-9&10.30* 11பிற்பகல் 121-மாலை 4.30 6இரவு 78 இரவு 10அதிகாலை
1 வரை நாளை அதி காலை 23& 56
எமகண்டம் காலை 9~10.30AM
குளிகை பிற்பகல் 12~1.30~PM
ராகுகாலம் பிற்பகல் 3~4.30 PM
சூரிய உதயம் ~ காலை 6. AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06. 12 PM.
சந்திராஷ்டமம் காலை 7.34 வரை திருவாதிரை பிறகு புனர்வஸு
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

இன்றைய ராசிபலன்கள்
26.09.2023
26-09-2023 ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். பிடிவாதமாகச் செயல்படுவதைக் குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிலவர் நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : பாதைகள் புலப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல் பிறக்கும். வசதிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : நன்மதிப்பு மேம்படும்.
ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : தேடல் பிறக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
சந்தேக உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மனதில் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் விவேகம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : விரயங்கள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்ட காரியம் கைகூடும். உத்தியோகப் பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப நபர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். பணி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : கவலைகள் குறையும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவதில் விவேகம் வேண்டும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.
சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியான சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பங்குதாரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : புரிதல் மேம்படும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : அனுபவம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
பொருளாதார நெருக்கடிகள் குறையும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : குழப்பம் விலகும்.
உத்திராடம் : ஆர்வம் மேம்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். நிர்வாக துறைகளில் தனித்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : சிந்தித்துச் செயல்படவும்.
அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்களால் புதிய பாதைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சதயம் : பேச்சுக்களை குறைக்கவும்.
பூரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : காரியங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : அபிவிருத்தியான நாள்.
ரேவதி : செல்வாக்கு மேம்படும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்
ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•னம௠பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯