
இன்றைய பஞ்சாங்கம் -பிப்.07
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!ஸ்ரீ:!!
தை ~ 24 (7.2.2023) செவ்வாய் கிழமை.
வருடம் ~ சுபக்ருத் வருடம் {சுபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ ஹேமந்த ருது.
மாதம் ~ தை மாஸம் {மகர மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ த்விதியை
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ 6.03 pm வரை மகம் பின் பூரம்
யோகம் ~ சோபனம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.39
சந்திராஷ்டமம்~ மகரம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்விதியை
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

இன்றைய ராசிபலன்கள்
07.2.2023
[06/02, 9:44 pm] Senkottai~Sriram: நாளைய (07-02-2023) ராசி பலன்கள்
மேஷம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் பொறுப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : ஆதாயம் உண்டாகும்.
கிருத்திகை : எண்ணங்கள் கைகூடும்.
ரிஷபம்
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
மிதுனம்
திட்டமிட்ட பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
திருவாதிரை : மந்தத்தன்மை குறையும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
கடகம்
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
சிம்மம்
மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வேலையாட்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
கன்னி
இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
துலாம்
மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : ஆரோக்கியம் மேம்படும்.
விசாகம் : ஈடுபாடு ஏற்படும்.
விருச்சிகம்
உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : இழுபறிகள் குறையும்.
கேட்டை : சுதந்திரம் அதிகரிக்கும்.
தனுசு
வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஈடுபாடு உண்டாகும்.
பூராடம் : அனுகூலம் ஏற்படும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
மகரம்
தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
அவிட்டம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
கும்பம்
மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். வித்தியாசமான அணுகுமுறையால் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
சாலமன் பாப்பையா உரை:
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.
கல்விப் பாலம்
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்
ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•னம௠பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯