பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய பஞ்சாங்கம்  – மார்ச் 26

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ 12 (26.3.2026) வியாழன் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாஸம் {மீன மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 2.55 pm வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 7.06 pm வரை திருவாதிரை பின் புனர்பூசம்
யோகம் ~ சோபனம்
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம்~ அசுபயோகம் / சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.18
சந்திராஷ்டமம் ~ விருச்சிகம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ திதித்வயம் அஷ்டமி / நவமி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - 2026
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - 2026
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
26.03.2026


மேஷம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவு படுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணத்தால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

அஸ்வினி : பக்குவம் ஏற்படும்.
பரணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : சோர்வுகள் குறையும்.


ரிஷபம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

கிருத்திகை : கலகலப்பான நாள்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


மிதுனம்

நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பிற மொழி மக்களிடம் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும்.
திருவாதிரை : சோர்வுகள் உண்டாகும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.


கடகம்

சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் வரவுகள் ஏற்படும். மனதை உருத்திய சில பிரசனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். வெளியூர் பயணம் வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : விட்டுக் கொடுத்து செயல்படவும்.
பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.


சிம்மம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மீகப் பணிகளில் புரிதல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : தெளிவு பிறக்கும்.
பூரம் : லாபகரமான நாள்,
உத்திரம் : புரிதல் ஏற்படும்.


கன்னி

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.


துலாம்

மனதளவில் தைரியம் பிறக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் ரீதியான செயல்களில் அனுபவம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : நெருக்கடிகள் ஏற்படும்.
விசாகம் : மேன்மை ஏற்படும்.


விருச்சிகம்

குடும்பத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் அதிகரிக்கும். வர்த்தக வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

விசாகம் : ஏற்ற இறக்கமான நாள்.
அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
கேட்டை : புரிதல் ஏற்படும்.


தனுசு

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பயணம் முலம் நட்பு வட்டம் விரிவடையும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.


மகரம்

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் வரும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். அரசு வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

உத்திராடம் : வரவுகள் உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : சிக்கல்கள் குறையும்.


கும்பம்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவங்கள் உருவாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சதயம் : வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.


மீனம்

கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்த தடுமாற்றம் மறையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அரசு வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : மேன்மை ஏற்படும்.
ரேவதி : சாதகமான நாள்.



இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

1 COMMENT

  1. ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக்க லக்கனம் பிறந்த தேதி
    ௨௦.௦௮.௧௯௮௫ நேரம் காலை ௪.௩௦ம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories