பஞ்சாங்கம் ஆக.20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

Published:

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய பஞ்சாங்கம்  – ஆக.20

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 3 ( 20.8.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாஸம் { ஸிம்ஹ மாதம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 11.48 PM வரை அஷ்டமி பின் நவமி.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ பகல் 12.27 PM வரை விசாகம் பின் அனுஷம்.
யோகம் ~ ப்ராம்மம்.
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம்~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 6.07 AM.
சந்திராஷ்டமம் ~ மேஷம்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ அஷ்டமி.
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - 2026
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - 2026
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
20.8.2026

மேஷம்

எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரணி : வரவுகள் தாமதமாகும்.
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.


ரிஷபம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.23 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : புதுமையான நாள்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


மிதுனம்

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : லாபகரமான நாள்.


கடகம்

முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் மேம்படும். மனதளவில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : அலைச்சல் மேம்படும்.
ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.


சிம்மம்

பொருளாதார நிலை மத்திமமாக இருக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சில சூழ்நிலைகள் சாதகமாக அமையும். கணவன் மனைவியிடையே வேறுபாடுகள் தோன்றும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : அமைதியான நாள்.


கன்னி

சிறு தூர பயணங்களால் தெளிவுகள் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஆதரவுகள் மேம்படும்.
அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


துலாம்

இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

ALSO READ:  பஞ்சாங்கம் - ஆக.19 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : குழப்பம் நீங்கும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : கலகலப்பான நாள்.


விருச்சிகம்

நீண்ட நாள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். முடியாத சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். விற்பனைத் துறையில் பொறுமையை கையாளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : குழப்பங்கள் விலகும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.


தனுசு

சுபகாரிய தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூராடம் : வேறுபாடுகள் மறையும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.


மகரம்

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை உருவாக்கும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் பேசும்பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திராடம் : மாற்றமான நாள்.
திருவோணம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.


கும்பம்

கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் மேம்படும். குழந்தைகளைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். வீடு தொடர்பான முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : மதிப்புகள் மேம்படும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.


மீனம்

மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி இடையே ஒத்துழைப்புகள் மேம்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடிவு பெறும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.21 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் குறையும்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : ஆதரவான நாள்.


இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

Related articles

Recent articles

spot_img