பஞ்சாங்கம் செப்.10 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

Published:

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய பஞ்சாங்கம்  – செப்.10

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 24 ( 10.9.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 10.56 AM வரை சதுர்தசி பின்னர் அமாவாஸ்யை.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ மாலை 3.16 PM வரை மகம் பின்னர் பூரம்.
யோகம் ~ ஸித்தம்.
கரணம் ~ சகுனி / சதுஷ்பாதம்.
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ மகரம்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ அமாவாஸ்யை.
இன்று ~ ஸர்வ அமாவாஸ்யை.

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - 2026
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - 2026
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
10.9.2026

மேஷம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகள் இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : மந்ததன்மை குறையும்.
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரிஷபம்

உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.11 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : தேடல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.


மிதுனம்

செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : அனுபவங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.


கடகம்

குடும்பத்தில் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சிந்தனைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : வேறுபாடுகள் குறையும்.


சிம்மம்

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் அமைதியை கையாள்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திரம் : ஆதாயகரமான நாள்.


கன்னி

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சற்று நிதானத்துடன் செயல்படவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். இறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சேமிப்புகள் குறையும்.
அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும்.
சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.


துலாம்

வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். இழுபறியான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றங்கள் ஏற்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.14 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.


விருச்சிகம்

சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : எதிர்ப்புகள் விலகும்.
கேட்டை : ஆதாயகரமான நாள்.


தனுசு

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வீடு மாற்ற தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்து வந்த தடைகள் குறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : செலவுகள் உண்டாகும்.
பூராடம் : தடைகள் குறையும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.


மகரம்

மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தினருடன் சிறு சிறு வேறுபாடுகள் தோன்றும். தொழில் நிமித்தமான புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

உத்திராடம் : வேறுபாடுகள் தோன்றும்.
திருவோணம் : இழுபறிகள் மறையும்.
அவிட்டம் : ஏற்ற இறக்கமான நாள்.


கும்பம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : பொறுப்புக்கள் அதிகரிக்கும்.


மீனம்

பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். தடையாக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.12 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : வேறுபாடுகள் நீங்கும்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.


இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

Related articles

Recent articles

spot_img