இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 19
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி~ 06 (19.3.2024) செவ்வாய் கிழமை.*
வருடம் ~ சோபக்ருத் வருடம் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ தசமி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ 11.56 pm வரை புனர்பூசம் பின் பூசம்
யோகம் ~ சோபனம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதி யோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.21
சந்திராஷ்டமம்~ 5.34 pm வரை விருச்சிகம் பின் தனுசு சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ தசமி
இன்று ~ கரிநாள்
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
இன்றைய ராசிபலன்கள்
19.03.2024
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு உண்டாகும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
அஸ்வினி : தடைகள் விலகும்.
பரணி : தெளிவு உண்டாகும்.
கிருத்திகை : ஆலோசனை வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரோகிணி : சிக்கல்கள் விலகும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசு காரியங்கள் கைகூடிவரும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்பு ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : ஆர்வமான நாள்.
புனர்பூசம் : வாய்ப்பு ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
புனர்பூசம் : தடுமாற்றம் ஏற்படும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : திருப்தியற்ற நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : அலைச்சல் ஏற்படும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : கவலைகள் குறையும்.
சித்திரை : சேமிப்பு மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்பு மேம்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
விசாகம் : மதிப்பு மேம்படும்.
அனுஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கேட்டை : தன்னம்பிக்கையான நாள்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். ஒப்பந்தப் பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : அலட்சியமின்றி செயல்படவும்.
உத்திராடம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சோர்வுகள் நீங்கும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : மதிப்பு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
சதயம் : வெற்றிகரமான நாள்.
பூரட்டாதி : போட்டிகள் குறையும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணம் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஆதரவு மேம்படும்.
உத்திரட்டாதி : திருப்பங்கள் ஏற்படும்.
ரேவதி : ஈடுபாடு உண்டாகும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.
தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்
ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•à®©à®®à¯ பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯