தேசியத் தலைவர் தேவர் படத்துக்கு வரி விலக்கு கோரிக்கை!

desiya thalaivar devar film - 2026

சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு எவ்வாறு வரி விலக்கு அளித்தது போல தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்க அளிக்க வேண்டும் – என உசிலம்பட்டியில் உள்ள அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்பினர் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் பஷீர் நடிப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியான தேசிய தலைவர் திரைப்படத்தை படக்குழுவினர், உசிலம்பட்டி பாரதிய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் தலைவர்களுடன் இணைந்து கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசியத் தலைவர் பட நாயகன் பஷீர், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இந்த ஜென்மத்திற்கான பலனை அடைந்து விட்டேன் என்றும்,  ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் சென்று வரும் போது எழுச்சி மிக்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க வாழ்க என,  கை தட்டல்களும், விசில் சத்தமும் தான் கடந்த 10 நாட்களாக எனது காதுகளில் கேட்க முடிகிறது.

விஜய், ரஜினி படம் மாதிரி இருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரும் கோவிலுக்கு செல்வது போன்று தியேட்டருக்கு வருகின்றனர். ஏழாம் படை முருகனாக தேவரை சொல்வார்கள், இந்த உசிலம்பட்டிக்கு நான் வரும் போது அவர் சார்ந்த சமுதாய மக்கள் வரவேற்பது சந்தோசமாக இருக்கிறது.

உலகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை கொண்டு சேர்ப்பதில் எனக்கும் ஒரு பங்காக மாறியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதியத் தலைவர் அல்ல தேசிய தலைவர் என்று சொல்லும் படம் இது. தமிழ்நாட்டிலேயே அதிகமான வரவேற்பு உசிலம்பட்டியில் தான் கிடைத்துள்ளது என , பேட்டியளித்தார்.

தொடர்ந்து, பேசிய பாரதிய பார்வட் ப்ளாக் தலைவர் முருகன்ஜி, சுதந்திர போராட்ட வீரர், மறைக்கப்பட்ட வரலாறுகளையும், எண்ணற்ற விமர்சனங்களுக்கு மத்தியில் யார் மனதும் புண்படாமல் எடுத்துள்ள படக்குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பகுதியில் உள்ள அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்புகள், தேவரின் திருத்தொண்டர்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக வைக்கும் கோரிக்கை எப்படி சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரி விலக்கு அளித்தது போல பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.

Topics

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.

பஞ்சாங்கம் மார்ச் 2 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories