
|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் | 20.5.2026 | புதன்கிழமை
வைகாசி ~ 6 { 20.5.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாதம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ மாலை 4.36 pm வரை சதுர்த்தி பின் பஞ்சமி.
நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம் ~ பகல் 11.12 AM வரை திருவாதிரை பின் புனர்பூசம்.
யோகம் ~ சூலம்
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00 pm
சூரியஉதயம் ~ காலை 5.53.
சந்திராஷ்டமம் ~ வ்ருச்சிகம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தி.
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (20-5-2026) ராசிபலன்கள்
மேஷம்
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொள்முதல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
அஸ்வினி : அறிவு வெளிப்படும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : தயக்கங்கள் குறையும்.
ரிஷபம்
செயல்பாடுகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : பொறாமைகள் குறையும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். நிர்வாக பொறுப்புகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களால் மனதில் சில நெருடல்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் மனதில் அமைதி நிலவும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தனைகள் பிறக்கும்.
திருவாதிரை : அமைதி நிலவும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
கடகம்
வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் தோன்றி மறையும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். சிறு சிறு விஷயங்களுக்கு பொறுமையுடன் முடிவெடுக்கவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சமூகப் நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்s
புனர்பூசம் : நெருக்கடிகள் ஏற்படும்.
பூசம் : கையிருப்புகள் குறையும்.
ஆயில்யம் : புதுமையான நாள்.
சிம்மம்
பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். சிந்தனைகளை செயல்பாடுகளில் மாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : தெளிவுகள் உண்டாகும்.
பூரம் : வெற்றிகரமான நாள்.
உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.
கன்னி
உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : லாபகரமான நாள்.
துலாம்
அரசு பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொத்துக்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.
சுவாதி : ஏற்ற இறக்கமான நாள்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
விருச்சிகம்
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சமூக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கேட்டை : புரிதல்கள் ஏற்படும்.
தனுசு
செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மேன்மை கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும்.
மகரம்
சோர்வுகள் நீங்க சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : மேன்மை ஏற்படும்.
திருவோணம் : அனுகூலம் ஏற்படும்.
அவிட்டம் : தீர்வுகள் கிடைக்கும்.
கும்பம்
புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சிந்தித்து முடிவு எடுக்கவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
மீனம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை குறித்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
உத்திரட்டாதி : அனுபவங்கள் ஏற்படும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
இன்றைய பொன்மொழி
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…
பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!




Seems very attractive.