
|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் | 26.8.2026 | புதன்கிழமை
ஆவணி ~ 9 { 26.8.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ காலை 8.49 AM வரை த்ரயோதசி பின் சதுர்தசி.
நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம் ~ இரவு 2.22 AM வரை திருஓணம் பின் அவிட்டம்.
யோகம் ~ ஸௌபாக்யம்.
கரணம் ~ தைதுளை / கரஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்லநேரம் ~ காலை 9.00 AM ~ 10.00 AM & மாலை 2.00 PM ~ 3.00 PM.
ராகுகாலம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
எமகண்டம் ~ காலை 7.30 AM ~ 9.00 AM.
குளிகை ~ காலை
10.30 AM ~ மதியம் 12.00 NOON.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 AM and 2.00 to 3.00 PM
சூரியஉதயம் ~ காலை 6.07.
சந்திராஷ்டமம் ~ மிதுனம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்தசி.
இன்று ~ ருக்உபகர்மா / ஓணம் பண்டிகை / ச்ரவண வ்ரதம்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (26-8-2026) ராசிபலன்கள்
மேஷம்
பூர்வீகச் சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணங்களில் இருந்த தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அஸ்வினி : அனுகூலமான நாள்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : தடைகள் விலகும்.
ரிஷபம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வேலையாட்கள் மாற்றம் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி : அனுபவங்கள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
மிதுனம்
உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்குச் செயல்பாடுகளால் விரயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
திருவாதிரை : சோர்வுகள் ஏற்படும்.
புனர்பூசம் : விரயம் ஏற்படும்.
கடகம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தினை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : இன்னல்கள் குறையும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தாய் மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். பணி நிமித்தமான செயல்களில் புதுமையான சூழல்கள் அமையும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் துரிதம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : அனுகூலம் ஏற்படும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : பொறுமை வேண்டும்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : இலக்குகள் பிறக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் சாதகமாகும்.
துலாம்
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியங்களை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாதப் போக்கை தளர்த்திக்கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : செல்வாக்கு கூடும்.
சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.
விசாகம் : முயற்சிகள் மேம்படும்.
விருச்சிகம்
அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு, சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தக பணிகளில் லாபகரமான சூழல்கள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
அனுஷம் : பக்குவம் பிறக்கும்.
கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.
தனுசு
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : நெருக்கம் மேம்படும்.
பூராடம் : உதவிகள் சாதகமாகும்.
உத்திராடம் : துரிதம் ஏற்படும்.
மகரம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.
திருவோணம் : பதற்றமின்றி செயல்படவும்.
அவிட்டம் : சோர்வுகள் உண்டாகும்.
கும்பம்
உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரப் பயணங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரட்டாதி : மேன்மை ஏற்படும்.
மீனம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : வரவுகள் கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
இன்றைய பொன்மொழி
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…
பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

