
|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் | 24.12.2025 | புதன்கிழமை
மார்கழி ~ 09 { 24.12.2025 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ ஹேமந்த ருது.
மாதம் ~ மார்கழி மாதம் { தனுர் மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 11.33 am வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ அவிட்டம்
யோகம் ~ ஹர்ஷனம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.31
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி
இன்று ~ கரிநாள்
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (24-12-2025) ராசிபலன்கள்
மேஷம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவுகள் மேம்படும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அஸ்வினி : குழப்பம் விலகும்
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : ஆதரவுகள் மேம்படும்.
ரிஷபம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : ஆசைகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களால் மதிப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.
புனர்பூசம் : மதிப்புகள் மேம்படும்.
கடகம்
முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் மேம்படும். மனதளவில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : அலைச்சல் மேம்படும்.
ஆயில்யம் : பேச்சுக்களில் கவனம்.
சிம்மம்
விரும்பிய காரித்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மகம் : கலகலப்பான நாள்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
கன்னி
தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : நட்புகள் கிடைக்கும்.
சித்திரை : யோகமான நாள்.
துலாம்
வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : ஆதரவுகள் பெருகும்.
சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
விருச்சிகம்
குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபகாரிய பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதி மேம்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : காரியனுகூலம் உண்டாகும்.
பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உத்திராடம் : மதிப்புகள் மேம்படும்.
மகரம்
தம்பதிகளுக்கு மனம் விட்டு பேசுவது நல்லது. பொருளாதாரம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : முடிவுகளில் கவனம்.
திருவோணம் : உத்வேகம் ஏற்படும்.
அவிட்டம் : பொறுப்புகள் கிடைக்கும்.
கும்பம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும்.சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.
சதயம் : இழுபறியான நாள்.
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
மீனம்
பொறுப்புகளால் உடலில் சோர்வுகள் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு பின்பே ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : சோர்வுகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
இன்றைய பொன்மொழி
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…
பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!




Seems very attractive.