இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 13
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 13.03.2024 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
மாசி~ 30 {13.3.2024 } புதன் கிழமை**
வருடம் ~ சோபக்ருத் வருடம் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ மாசி மாதம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 8.54 am வரை த்ருதியை பின் சதுர்த்தி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 11.25 pm வரை அஸ்வினி பின் பரணி
யோகம் ~ ப்ராம்யம்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~
அசுபயோகம்…
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை
10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.25
சந்திராஷ்டமம் ~ கன்னி
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தி
இன்று* ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (13-03-2024) ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அஸ்வினி : சோர்வுகள் உண்டாகும்.
பரணி : பொறுப்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
கிருத்திகை : அசதிகள் மறையும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சொத்து விற்பனையில் லாபம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
திருவாதிரை : ஆதாயகரமான நாள்.
புனர்பூசம் : லாபம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்பாராத பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். ஆய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : புரிதல் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதரவான நாள்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் பொறுப்பு மேம்படும். பல பணிகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : பொறுப்பு மேம்படும்.
அஸ்தம் : குழப்பங்கள் உண்டாகும்.
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
சித்திரை : சந்திப்பு உண்டாகும்.
சுவாதி : தெளிவு ஏற்படும்.
விசாகம் : சஞ்சலங்கள் விலகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : தடைகள் விலகும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : லாபம் மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப வருமானம் குறித்த சிந்தனை ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல் ஏற்படும். சமூகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பூராடம் : அலைச்சல் ஏற்படும்.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
மனை மீதான கடன் உதவி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். உறவினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பயணங்கள் ஈடேறும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தி உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
உத்திராடம் : உதவி கிடைக்கும்.
திருவோணம் : பயணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : திருப்தி உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளில் தெளிவு ஏற்படும். மனதில் இடமாற்றம் குறித்த எண்ணம் அதிகரிக்கும். தனவருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
சதயம் : தெளிவு ஏற்படும்.
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
நண்பர்களுக்கிடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
ரேவதி : மதிப்பு மேம்படும்.
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
இன்றைய பொன்மொழி
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
Seems very attractive.