December 24, 2025, 10:34 AM
25.2 C
Chennai

ஆஞ்சியோ…ன்னா இதான்! தெரிஞ்சுக்குங்க!

coronary angiography test stunt - 2025

Dr. BRJ கண்ணன், மதுரை

ஆஞ்சியோ என்றால் என்ன?

இதயத்தின் மேல்புறத்தில் ஓடும் ரத்தக்குழாய்களில் (கொரோனரி தமனிகள்) உண்டாகும் அடைப்புகளால்தான் இதயம் தொடர்பான நெஞ்சு வலியும் மாரடைப்பும் ஏற்படுகின்றன. அடைப்பு உள்ளதா என்பதை ஈ.சி.ஜி, எக்கோகார்டியோகிராம் போன்றவை உறுதியாகச் சொல்லாது. அதற்காகச் செய்யப்படும் ஒரு சிறப்புப் பரிசோதனைக்குப் பெயர் தான் ஆஞ்சியோகிராம். அதில் அடைப்பு கண்டறியப்பட்டால் அந்த அடைப்பை நீக்குவதற்குப் பெயர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பதாகும். பெரும்பாலான சமயங்களில் அந்த இடத்தில் மெல்லிய கம்பிகளாலான ஒரு ஸ்பிரிங் போன்ற சாதனத்தைப் (ஸ்டென்ட்) பொருத்துவோம். சில சமயம் பலூன் கொண்டு அடைப்பை நீக்கிய பின் ஸ்டென்ட் பொருத்த வேண்டிய அவசியம் வருவதில்லை.

ஆக, யாராவது “நான் ஆஞ்சியோ செய்து கொண்டேன்” என்று கூறினால் அந்த வாக்கியத்தில் முழுமையான செய்தி இல்லை. பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் ‘ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்’ என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் ‘ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்’ என்றும் சொல்ல வேண்டும்.

ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நபர் அது உள்ளே இருப்பதை உணர முடியுமா?

இல்லை. உணர முடியாது.

உடம்பு அசையும் பொழுதோ, ஏதேனும் ஒரு பக்கம் திரும்பிப் படுக்கும் பொழுதோ, உடற்பயிற்சி செய்யும் பொழுதோ ஸ்டென்ட் நகன்று விட வாய்ப்புள்ளதா?

இல்லை. தமனியில் சிறிதளவும் நகல முடியாது.

அவர்கள் ஏதேனும் தனிப்பட்ட முறையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

பெரிதாக ஒன்றும் இல்லை. பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். ரத்தம் கட்டி பிடிக்காமல் இருக்கத் தட்டை அணுக்களின் செயல்பாடுகளைக் குறைக்கும் ஆன்ட்டி பிளேட்லெட்ஸ் (anti platelets) எனப்படும் மருந்துகளை மறக்கும் பட்சத்தில் ஸ்டென்ட்டின் உள்ளேயே ரத்தக்கட்டி உருவாகி உயிருக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பு உண்டு.

ஸ்டென்ட் கரைந்து விடுமா?

இல்லை. அது தமனியுடன் ஐக்கியமாகிவிடும்.

கரையும் ஸ்டென்ட் என்று ஏதேனும் உள்ளதா?

உண்டு. ஆனால் தற்சமயம் மிகவும் வெறுசிலருக்கே அம்மாதிரியான ஸ்டென்ட் பொருத்துகிறோம்.

ஒன்றோ இரண்டோ அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி என்றும் மூன்று அல்லது மேற்பட்ட அடைப்புகளோ இருந்தால் பைபாஸ் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே, உண்மையா?

பெரும்பாலான சமயங்களில் இது உண்மைதான். ஆனால் சில சமயங்களில் நான்கு அடைப்பு உள்ள நபருக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலமாகச் சரி செய்திருக்கிறோம். ஒரே அடைப்பு உள்ள நபருக்குப் பைபாஸ் சிகிச்சையும் செய்திருக்கிறோம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து நாங்கள் இவ்வாறு முடிவு எடுக்கிறோம்

ஸ்டென்ட் வைத்த இடத்தில் மறுபடியும் அடைப்பு வர வாய்ப்புள்ளதா?

உண்டு. ஸ்டென்ட் வைத்த இடத்திலும் அதற்கு மேலும் கீழும் மற்ற எந்த இடத்திலும் மீண்டும் அடைப்பு வரலாம். பைபாஸ் செய்தாலும் செய்த இடத்திலும் அதற்கு மேலும் கீழும் மீண்டும் அடைப்பு வரலாம்.

பைபாஸ் செய்து கொண்டால் அடைப்பு பின்னர் வராது என்று கூறுகிறார்களே?

அது உண்மையல்ல. ஆஞ்சியோ பிளாஸ்டியோ பைபாஸ் சிகிச்சையோ ஏற்கனவே உள்ள அடைப்பு எனும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு. அவ்வளவுதான். அந்த அடைப்பை உருவாக்கிய நோய் அவர்கள் உடலில் அப்படியேதான் இருக்கும். அதனால் புகைப் பழக்கத்தை விடுதல், இரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றிற்கான சிகிச்சைகளை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். அவைகளை முழுமையாக கட்டுக்குள் வைத்தால்தான் மீண்டும் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

ஆஞ்சியோ பற்றிய சந்தேகங்கள்

1. இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் நம் உடல் தானாகச் சரி செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதா?

இல்லை. முறையான மருத்துவத்தால் அடைப்புகள் மேற்கொண்டு கூடாமல் ஓரளவு தடுக்க முடியும். ஏற்கனவே ஏற்பட்டு விட்ட அடைப்பை கரைக்க முடியாது.

2. எனக்கு எட்டு வருடங்களுக்கு முன் ஸ்டென்ட் வைக்கப்பட்டது. நன்றாக இருக்கிறேன். மறுபடியும் ஆஞ்சியோ எடுத்துப் பார்க்க வேண்டுமா?

அவசியம் இல்லை. 20 – 22 வருடங்களுக்கு முன் ஸ்டென்ட் வைத்துக் கொண்ட பலரும் நலமாக இருக்கிறார்கள். இரத்த அழுத்தம் சர்க்கரை போன்றவற்றைச் சீராக வைத்துக் கொண்டு, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டாலே போதும். சில காலம் கழித்து ஒரு சிலருக்கு ஏற்படும் நெஞ்சுவலி அல்லது மற்ற தொந்தரவுகளைப் பொறுத்தே மறுபடியும் ஆஞ்சியோ பரிசோதனையைப் பரிந்துரைப்போம்.

3. ஸ்டென்டுக்கு காலாவதி என்று ஏதேனும் உண்டா? (expiry date)

அப்படி எதுவும் இல்லை. கொரோனித் தமனிகளில் பொருத்தப்பட்ட பின் ஸ்டென்ட்டில் பூசப்பட்டிருந்த மருந்து மெதுவாக வெளிவரும். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அந்த மருந்து தீர்ந்துவிடும். பின்னர் ஸ்டென்ட்டின் மேல் நம் உடம்பு செல்களால் ஆன ஒரு மெல்லிய போர்வையைப் போர்த்தி விடும் (endothelialization). ஸ்டென்ட் அந்த இரத்தக்குழாயுடன் ஐக்கியமாகிவிடும்.

வயிற்றில் பித்தப்பைக் கல் மற்றும் சிறுநீரகக் கல் இருந்தாலும் மருத்துவர்கள் ஸ்டென்ட் வைப்பார்கள். அது வேறு விதமானது தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் கழித்தோ மாதங்கள் கழித்தோ அதனை வெளியே எடுத்து விடுவார்கள்.

கொரோனரி தமனிகளில் ஸ்டென்ட் நிரந்தரமானது. பொருத்தப்பட்ட பின் நாம் நினைத்தாலும் அதனை வெளியே எடுக்க முடியாது.

4. இது உலோகத்தால் ஆனது என்று சொல்கிறீர்களே, உள்ளே துருப்பிடித்துவிடாதா?

(இது உண்மையிலேயே ஐடியில் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் எழுப்பிய கேள்வி)

இரும்பு தான் துருப்பிடிக்கும். ஸ்டென்ட் கோபால்ட் குரோமியம் (Cobalt Chromium) அல்லது அது போன்ற உலோகக் கலவைகளால் ஆனது. இது ரத்தத்துடனோ நம் உடம்பின் திசுக்களுடனோ வினைபுரியும் தன்மையற்றது.

5. ஸ்டென்ட் வைத்தால் ஏன் வாழ்க்கை முழுவதும் மாத்திரை எடுக்கச் சொல்கிறீர்கள்?

அது ஸ்டென்ட்டிற்காக அல்ல. மேற்கொண்டு அடைப்பு வராமல் தடுக்கவும் உடலில் உள்ள மற்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும் தான்.

6. மாத்திரைகளைத் தவறாமல் எடுக்கிறேன், நன்றாக இருக்கிறேன். மருத்துவரை சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

வேறு பிரச்சனை இல்லாத பட்சத்தில் வருடத்தில் ஒரு முறையாவது மருத்துவரை சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. உடம்பின் திசுக்களோ, இரத்த அழுத்தமோ, சர்க்கரையோ நிலையானது அல்ல, கூடக் குறைய ஆகும். அதற்கேற்றவாறும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட உப்புகளையும் கொழுப்புகளையும் பரிசோதித்து, அதைப் பொருத்தும் மருத்துவர் மருந்துகளில் மாற்றங்கள் செய்வார்.

7. மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்தால் சிறுநீரகப் பிரச்சினை வரும் என்கிறார்களே, உண்மையா?

அப்பட்டமான பொய். சர்க்கரை அல்லது மற்ற பிரச்சினையால் சிறுநீரகப் பிரச்சனை வருவதைத் தடுக்கும் வல்லமை கொண்டவை மாத்திரைகள். எனக்குத் தெரிந்து 25 வருடங்களுக்கு மேலாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு பலரும் நலமாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொண்டதால்தான் இதய நோய் தாக்கியும் 25 வருடங்களாக நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பொதிகை, கொல்லம், மயிலாடுதுறை ரயில்கள் நேரம் மாற்றம்!

கொல்லம் மயிலாடுதுறை பொதிகை ரயில்களின் நேரம் மாறுகிறது. ரயில்கள் இனி முன்னதாகவே சென்று சேரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் – டிச.24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ஆரன்முழாவில் இருந்து சபரிமலை ஐயப்பன் தங்க அங்கி புறப்பாடு!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில்

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பொதிகை, கொல்லம், மயிலாடுதுறை ரயில்கள் நேரம் மாற்றம்!

கொல்லம் மயிலாடுதுறை பொதிகை ரயில்களின் நேரம் மாறுகிறது. ரயில்கள் இனி முன்னதாகவே சென்று சேரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் – டிச.24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ஆரன்முழாவில் இருந்து சபரிமலை ஐயப்பன் தங்க அங்கி புறப்பாடு!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில்

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

Entertainment News

Popular Categories