சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

Published:

thiruparankundram murugan temple - 2026

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

2026-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை நிகழ உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகள் செய்யப்பட உள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், கிரகண காலத்தை முன்னிட்டு இன்று காலை 8:20 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இன்று காலை 8:20 மணி முதல். கிரகணம் முடிந்து சுத்திகரிப்பு பூஜைகள் முடிவடைந்த பின், இன்று இரவு 7:30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெறும். அதன் பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று நிகழும் இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி, மாலை 6:48 மணிக்கு நிறைவடைகிறது. கிரகண காலத்தில் கோவில்களில் பூஜைகள் தவிர்க்கப்படுவது வழக்கமான நடைமுறை என்பதால்,
இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களிலும் இன்று காலை முதல் நடை சாத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை காலை முதல் வழக்கம் போல் அனைத்து கால பூஜைகளும், தரிசனமும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img