அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!

achankoil therottam rathothsavam - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படைவீடு கோவில்களில் முக்கிய ஸ்தலமான அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா புஷ்பாஞ்சலி வழிபாடு நாளை பிப்ரவரி 3ஆம் தேதி, தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. சுமார் 2 டன் மலர்களால் சுவாமி அச்சன்கோவில் தர்ம சாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் உள்ளது அச்சன்கோவில். இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இது ஐயப்பனின் படைவீடு கோவில்களில் மூன்றாவது ஸ்தலமாக உள்ளது‌. இங்கு தர்மசாஸ்தா, பூர்ணம்மாள் புஷ்கலாதேவியுடன் அரசனாக அருள் பாலிக்கிறார்.

இந்தக் கோவிலுக்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலர் சென்று வருகிறார்கள். இந்தக் கோவில் மூலவர் தர்மசாஸ்தா பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் நாளை – பிப் 3ஆம் தேதி புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நாளை காலையில் 5 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், பகலில் நெய் அபிஷேகம் கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் களபாபிஷேகம் ஆகியன நடைபெறும். மதியம் களபாபிஷேகம் நடத்தி உச்சி கால பூஜை வழிபாடு நடைபெறும்.

மாலையில் யானை மீது சுவாமி அமர்ந்து சீவேலி வழிபாடு தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 2 டன் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் அந்தப் பூக்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

பகல் இரவு அன்னதானமும் நடைபெறும். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை அன்பர்கள் செய்து வருகின்றனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories