தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Published:

railway news - 2026
#image_title

கேரளாவில் பாரம்பரிய பண்டிகை ஓணம் வந்துவிட்டது; இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கோவை-செங்கோட்டை-திருவனந்தபுரம் , மைசூர் -செங்கோட்டை-திருவனந்தபுரம் இடையே ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 6 வரை சென்னை சென்ட்ரல் மற்றும் கொல்லத்தை இணைக்கின்றன. ஓணம் பண்டிகையின் போது ஏற்படும் பெரும் கூட்ட நெரிசலை முன்னிட்டு இந்த புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 13 முதல், ரயில் எண் 06117 (சென்னை சென்ட்ரல் – கொல்லம்) ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மாலை 04.20 மணிக்கு கொல்லத்தை வந்தடையும். ஆகஸ்ட் 14 முதல், திரும்பும் ரயில் எண் 06118 (கொல்லம் – சென்னை சென்ட்ரல்) ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 06.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

இதற்கிடையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவிலிருந்து சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹுப்பள்ளி மற்றும் கோட்டயம் இடையே இந்த சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஆகஸ்ட் 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஹுப்பள்ளியிலிருந்து கோட்டயத்திற்கும், ஆகஸ்ட் 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோட்டயத்திலிருந்து ஹுப்பள்ளிக்கும் இயக்கப்படும்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு 100-க்கும் மேற்பட்ட கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னதாகக் கூறியிருந்தார். பண்டிகைக் காலத்தில் பயணிகளின் தேவை அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கமாக, பண்டிகைக் காலங்களில் பயணச்சீட்டுகள் மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடுவதால், பயணச் சிக்கல்கள் மோசமடைகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் ரயில்வே தலையிட்டுள்ளது.

பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, தெற்கு ரயில்வேயால் ஓணம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புச் சேவைகள், ஓணம் பண்டிகைக் காலத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதையும், முக்கிய நகரங்களைக் கேரளாவுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஓணம் பண்டிகை க்கு இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கோவை-செங்கோட்டை-திருவனந்தபுரம் , மைசூர் -செங்கோட்டை-திருவனந்தபுரம் இடையே ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img