ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கிய செல்லில் முகநூல் நட்பு! ஆபாச புகைப்பட மிரட்டலால் சிறுமிக்கு வந்த ஆபத்து!

tamilselvan
tamilselvan

பேஸ்புக் மூலம் பழகி பள்ளி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து இணையவழி கல்வி பயின்று வந்துள்ளார். இதற்காக பெற்றோர்கள் அலைபேசி ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர்.

இதன்மூலமாக மாணவி முகநூல் கணக்கு தொடங்கவே, முகநூல் வாயிலாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. காமுகன் தமிழ்ச்செல்வன் முதலில் நல்லவன் போல பழகி, சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த 5 மாதமாக காதலித்து வந்த நிலையில், அவ்வப்போது வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதன்போது, தமிழ்செல்வன் மாணவியை புகைப்படம் எடுத்து வைத்துள்ளான். இதனை ஆபாசமாக சித்தரித்து சிறுமிக்கு அனுப்பி, தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்துள்ளான்.

மேலும், ஆசைக்கு இணங்காத பட்சத்தில் ஆபாசமாக சித்தரித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்வேன் என்றும் மிரட்டவே, பயந்து போன சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தமிழ்ச்செல்வனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், முகநூலில் வரும் நட்புகளை நம்பி சிறுமிகள், பெண்கள் காதல் வலையில் வீழவேண்டாம் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories