இன்றைய பஞ்சாங்கம்: மார்ச் 17
ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री:
श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி ~ 4 (17.3.2024 ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { *மீன மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ மறுநாள் காலை 3.18 am வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 9.54 pm வரை மிருகசீரிஷம் பின் திருவாதிரை
யோகம் ~ ஆயுஷ்மான்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30. நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.22
சந்திராஷ்டமம் ~ காலை 9.41 வரை துலாம் பின் விருச்சிகம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ தசமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (17-03-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
விமர்சன பேச்சுக்களால் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். தள்ளிப்போன காரியங்கள் எளிதில் முடியும். சவாலான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : தேவைகள் பூர்த்தியாகும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
கணவன்-மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். பேச்சு வன்மையால் காரிய அணுகூலம் ஏற்படும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
கிருத்திகை : சேமிப்பு மேம்படும்.
ரோகிணி : லாபம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுபவமான நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : அலைச்சலான நாள்.
பூசம் : பயணங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : வாதங்கள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆர்வமான நாள்.
பூரம் : மாற்றம் ஏற்படும்.
உத்திரம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
அஸ்தம் : அனுபவமான நாள்.
சித்திரை : தாமதம் விலகும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : நெருக்கம் மேம்படும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விசாகம் : ஒப்பந்தம் சாதகமாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். மற்றவர்களின் பேச்சுக்களை பொறுமையாக கையாளவும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
விசாகம் : அலைச்சல் உண்டாகும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : குழப்பம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தந்திரமான சில விஷயங்களால் லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மூலம் : வாய்ப்பு கிடைக்கும்.
பூராடம் : அனுபவம் உண்டாகும்.
உத்திராடம் : உதவி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : திருப்பங்கள் ஏற்படும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எழுத்துத் துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : கனவுகள் பிறக்கும்.
பூரட்டாதி : வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
நினைத்த சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : உயர்வு உண்டாகும்.
தினம் ஒரு திருக்குறள்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•à®³à¯ உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response