பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: பிப்.22

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

மாசி * ~ 10 (22. 2.2026* ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ விச்வாவஸூ வருஷம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர* ருது.
மாதம்~ மாசி மாஸம் { *கும்ப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 12.18 pm வரை பஞ்சமி பின் ஷஷ்டி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 6.59 pm வரை அஸ்வினி பின் பரணி
யோகம் ~ சுப்ரம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.36
சந்திராஷ்டமம் ~ கன்னி
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ ஷஷ்டி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய (22-2-2026) ராசி பலன்கள்


மேஷம்

சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த திருப்தியின்மை விலகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் மேம்படும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரிஷபம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். பணி நிமித்தமான ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வங்கிப் பணிகளில் இருந்த தடைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : தடைகள் குறையும்.
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.


மிதுனம்

நிர்வாக சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயணம் வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மீக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். வாழ்க்கை துணைவரால் ஆதாயம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.


கடகம்

உறவினர்களுக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாடங்களில் ஆர்வமின்மை ஏற்படும். பயணத்தில் விவேகம் வேண்டும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். அரசு காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : வாதங்கள் நீங்கும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : தாமதம் உண்டாகும்.


சிம்மம்

புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிர்வாக சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் திறமைகள் வெளிப்படும். வாக்கு வன்மை மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உலோக தொடர்பான பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திரம் : லாபகரமான நாள்.


கன்னி

உறவினர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் மேம்படும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வர்த்தக பணிகளில் லாபங்கள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஆதரவு ஏற்படும்.
அஸ்தம் : அனுகூலம் ஏற்படும்.
சித்திரை : லாபங்கள் கிடைக்கும்.


துலாம்

பூர்வீக சொத்துக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபகரமான சூழல் காணப்படும். செல்வ சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : லாபகரமான நாள்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.


விருச்சிகம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனை சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபார ரீதியான சந்திப்புகள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அரசு காரியத்தில் ஆதாயகரமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்கள் வழியில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
அனுஷம் : ஆதாயகரமான நாள்.
கேட்டை : மேன்மை ஏற்படும்.


தனுசு

புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : ஆதாயம் ஏற்படும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.


மகரம்

குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : அனுபவம் வெளிப்படும்.
அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.


கும்பம்

பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வர்த்தக வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவம் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணிகளில் சில மாற்றமான தருணங்கள் அமையும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.


மீனம்

சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கல்வி செயல்களில் ஆர்வமின்மை உண்டாகும். கற்றல் திறனில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறைகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பூர்விக சொத்துக்கள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திரட்டாதி : ஆர்வமின்மை உண்டாகும்.
ரேவதி : விரயங்கள் உண்டாகும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar 1 - 2026

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


srirangam ranganathar - 2026

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!

  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

5 COMMENTS

  1. தினசரி பஞ்சாங்கம் மற்றும் தினப் பலன்கள் உபயோகமாக உள்ளது. நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories