
இன்றைய பஞ்சாங்கம்: மே 17
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி ~ 3 ( 17.5.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ இரவு 11.43 am வரை ப்ரதமை பின் த்விதீயை.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ மாலை 4.01 pm வரை க்ருத்திகை பின் ரோஹினி.
யோகம் ~ சோபனம் / அதிகண்டம்.
கரணம் ~ கிம்ஸ்துக்னம் / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 am & 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 5.53
சந்திராஷ்டமம் ~ துலாம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ ப்ரதமை.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (17-5-2026) ராசி பலன்கள்
மேஷம்
நண்பர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். வாத திறமையால் ஆதாயம் அடைவீர்கள். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விவசாயத்தில் அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உறவுகளிடத்தில் இருந்த மனக்கசப்புகள் மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அஸ்வினி : வேறுபாடுகள் மறையும்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : மனக்கசப்புகள் மறையும்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
மிதுனம்
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். துணைவரிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். அலுவலக பணிகளை முடிப்பது நல்லது. பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். பழைய பிரச்சனைகள் குறித்த எண்ணங்கள் மனதில் மேம்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : தேவைகள் நிறைவேறும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : கையிருப்புகள் குறையும்.
கடகம்
சகோதர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மூலம் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : சிந்தனைகள் பிறக்கும்.
ஆயில்யம் : இழுபறிகள் மறையும்.
சிம்மம்
வியாபாரத்தில் பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கால்நடைகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மூட்டு மற்றும் முதுகு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தடைகள் அகலும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
பணிபுரியும் இடத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் தெளிவை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சிறுசிறு அலைச்சல்கள் தோன்றி மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : அலைச்சல்கள் மறையும்.
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
துலாம்
தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். தோற்றப்பொழிவில் சில மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரம் ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : தாமதம் ஏற்படும்.
விசாகம் : விவேகம் வேண்டும்.
விருச்சிகம்
புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு செயல்களில் இருந்த தாமதம் விலகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
விசாகம் : அறிமுகங்கள் ஏற்படும்.
அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
கேட்டை : நெருக்கடிகள் குறையும்.
தனுசு
கல்வியில் இருந்த வந்த ஆர்வமின்மை குறையும். தம்பதிகளுக்குள் பொறிதல் மேம்படும். கலைஞர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் கைகூடி வரும். நண்பர்களுக்கிடையே புரிதல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : ஆர்வமின்மை குறையும்.
பூராடம் : லாபகரமான நாள்.
உத்திராடம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
மகரம்
கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். உங்களை சுற்றியிருப்பவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகம் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
திருவோணம் : முதலீடுகளில் கவனம்.
அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கும்பம்
பழக்கவழக்கத்தில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.
சதயம் : தீர்வுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
மீனம்
நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
பூரட்டாதி : வேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : அமைதி பிறக்கும்.
தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!
- எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
- நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
- பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
- வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
- ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
- ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!





தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•ம௠மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•ள௠உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response