
இன்றைய பஞ்சாங்கம்: ஜூன் 28
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ~ 14 ( 28.6.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆனி மாஸம் { மிதுன மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ மறுநாள் காலை 4.19 AM வரை சதுர்தசி பின் பௌர்ணமி.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ இரவு 2.43 AM வரை கேட்டை பின் மூலம்.
யோகம் ~ சுபம்.
கரணம் ~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
ராகு காலம் மாலை 4.30 6.00 PM.
எமகண்டம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PMப.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30 PM.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 AM & 3.00 to 4.30 PM.
சூரிய உதயம் ~. காலை 5.57.
சந்திராஷ்டமம் ~ மேஷம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ சதுர்த்தசி.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (28-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகளில் தாமதம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகள் கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : விரயம் உண்டாகும்.
பரணி : விழிப்புணர்வு வேண்டும்.
கிருத்திகை : கனிவு வேண்டும்.
ரிஷபம்
புதிய பொறுப்புகளும் பதவிகளும் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : வேறுபாடுகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
மிதுனம்
காப்பீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். முக்கியமான முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
கடகம்
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
புனர்பூசம் : சிந்தனை அதிகரிக்கும்.
பூசம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.
கன்னி
உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
துலாம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : மாற்றம் ஏற்படும்.
விசாகம் : வரவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் குழப்பங்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
அனுஷம் : வாதங்கள் மறையும்.
கேட்டை : சோர்வுகள் உண்டாகும்.
தனுசு
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : புரிதல்கள் மேம்படும்.
பூராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
மகரம்
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பிரச்சனை குறையும்.
திருவோணம் : தெளிவும் ஏற்படும்.
அவிட்டம் : ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்
விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
மீனம்
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மூலம் நன்மை கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.
உத்திரட்டாதி : நன்மை கிடைக்கும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!
- எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
- நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
- பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
- வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
- ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
- ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!





தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•ம௠மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•ள௠உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response