பஞ்சாங்கம் ஆக.30 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Published:

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: ஆக.30

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 13 ( 30.8.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம்~ ஆவணி மாஸம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ காலை 10.09 AM வரை த்விதீயை பின்னர் த்ருதீயை.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ மறுநாள் காலை 4.59 AM வரை உத்தரட்டாதி பின்னர் ரேவதி.
யோகம் ~ த்ருதி / சூலம்.
கரணம் ~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00 PM.
எமகண்டம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30 PM.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 AM & 3.00 to 4.30 PM.
சூரிய உதயம் ~. காலை 6.07.
சந்திராஷ்டமம் ~ ஸிம்ஹம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ த்ருதீயை.
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய (30-8-2026) ராசி பலன்கள்

மேஷம்

வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் ஆலோசித்து முடிவெடுக்கவும். பயனற்ற கருத்துகளை தவிர்க்கவும். சிந்தனைகளின் போக்கில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : பிரச்சனைகள் நீங்கும்.
கிருத்திகை : சிந்தனைகளில் கவனம்.


ரிஷபம்

செய்கின்ற முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான சில செயல்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.31 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : முடிவுகள் பிறக்கும்.


மிதுனம்

பழைய அனுபவம் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பொதுமக்கள் பணிகளில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


கடகம்

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நேர்மைக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான சூழல்கள் உருவாகும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

புனர்பூசம் : அதிர்ஷ்டகரமான நாள்.
பூசம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
ஆயில்யம் : குழப்பங்கள் குறையும்.


சிம்மம்

சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் உண்டாகும். பணி நிமித்தமான பொறுப்புகளும் அலைச்சலும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆதரவாக இருந்தவர்கள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மகம் : குழப்பங்கள் உண்டாகும்.
பூரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


கன்னி

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வாகன பயணங்களால் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

உத்திரம் : புரிதல்கள் உண்டாகும்.
அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.
சித்திரை : அனுபவம் ஏற்படும்.


துலாம்

சுப காரியம் நிமித்தமான விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் சிறு சிறு மாறுதல்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : விரயங்கள் ஏற்படும்.
சுவாதி : அனுபவங்கள் ஏற்படும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.04 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

விருச்சிகம்

புதிய முயற்சிகளில் அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத சில விரயங்கள் நேரிடும். எதிலும் அவசரம் இன்றி சிக்கனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அனுஷம் : பொறுப்புகள் குறையும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.


தனுசு

எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார நிமித்தமான பயணம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : அமைதியான நாள்.
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


மகரம்

பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் மனம் அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : திருப்தியான நாள்.
அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.


கும்பம்

தனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


மீனம்

மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். பிடிவாதக் குணத்தை குறைத்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar 1 - 2026

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.29 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


srirangam ranganathar - 2026

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!

  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

Related articles

Recent articles

spot_img