வாசிப்போர் நாடிடும் புத்தகக் கண்காட்சி!

chennai bookfare - 2026
  • ஜெயஸ்ரீ எம். சாரி

கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி 2026 நேற்று இனிதே நிறைவுற்றது. இந்தக் கண்காட்சியில் எவ்வளவுக்கு புத்தகங்கள் விற்றிருக்கின்றன மக்கள் எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதெல்லாம் இனி தெரியவரும். வாசிப்புப் பழக்கம் தேய்ந்து வரும் இந்நாட்களில் இத்தகைய புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் ஓர் ஊக்குவிப்பு முயற்சியே!

நம் இல்லத்தில் இருக்கும் புத்தகங்களே நமக்கு பெருமை என்பது ஒரு அழகான கூற்றாகும். புத்தகம் வாசிப்பை தன் அன்றாட நிகழ்வுகளில் கட்டாயமாக கொண்டுள்ள என் தந்தையுடன் நான் சென்னை புத்தகக் கண்காட்சி – 2026 காணச் சென்றேன்.

எனக்கு ஒரு அருமையான அனுபவம் அங்கு கிட்டியது. நுழைவுச் சீட்டினையும், ஸ்டால்களின் வரிசைகள் தாங்கிய சீட்டுகளையும் பெற்றுக் கொண்டு நாங்கள் இருவரும் ஸ்டால்களில் இருந்த புத்தகங்களை காணச் சென்றோம்.

பிரம்மாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் புத்தகங்களை காண்பதே மனதிற்கு நிறைவாய் இருந்தது. அந்தக் காலத்து எழுத்தாளர்களான உ.வே.சா, நா. பார்த்தசாரதி, லா.சா.ரா. கோதைநாயகி அம்மாள், லெக்ஷ்மி, மெரீனா, சோ ராமஸ்வாமி, சாவி, கல்கி, அண்ணாதுரை போன்றோர்களின் புத்தகங்களை பார்க்கும் போதே பரவசமாய் இருந்தது.

நாங்கள் சென்ற அன்று கூட்டம் அதிகமில்லை. மாற்றுத் திறனாளிகள் சிலர் தங்கள் உதவியாளர்களோடு வந்திருந்ததைப் பார்த்த போது புத்தகங்கள் ஒரு சிறந்த தோழமையாக, துணையாக இன்றும் இருக்கின்ற விஷயம் புரிந்தது. புத்தகப் பிரியரான என் தந்தை பார்த்து பார்த்து தனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தனக்கு பிடித்த பதிப்பகங்களில் இருந்து வாங்கினார்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டாலில் திருமதி. கிரிஜா ராகவன், ஆசிரியர், லேடீஸ் ஸ்பெஷல், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவருக்கு இலக்கியச் சாரலின் புத்தாண்டு – பொங்கல் இதழினை அளித்து விட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். பின்னர், எங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொண்டோம்.

பிரபல தமிழ் நாளிதழ் அமைத்திருந்த ஸ்டாலில் நல்லக் கூட்டம். மற்றொரு தமிழ் நாளிதழ் ஸ்டால் காலியாகவே இருந்தது. புகழ்பெற்ற ஆங்கில நாளிதழின் ஸ்டாலில் இருந்த ஊழியர்கள் வாசகர்களின் கையைப் பிடித்து இழுத்து சந்தாக் கட்டுங்கள் என்று கட்டாயப்படுத்தாததால் வாசகர்கள் தப்பித்தார்கள்.

தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில் ‘நம் உரத்த சிந்தனை’யும் கவரில் இருந்ததால் அதையும் ‘க்ளிக்’ செய்தேன். என் தந்தை பணிபுரிந்த இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஸ்டாலில் அவரை நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு மனநிறைவோடு புதிய புத்தகங்களை கையில் ஏந்தி நாங்கள் வந்தோம். தமிழ்நாடு அரசின் இலவச பேருந்தில் கண்காட்சி திடலில் இருந்து வந்து மெட்ரோவில் இல்லம் வந்து சேர்ந்தோம். இல்லம் வந்தவுடன் என் தந்தை தான் வாங்கிய புத்தகங்களில் எல்லாம் தன் பெயரையும், வாங்கிய தேதியையும் எழுதினார்.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories