சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

janagai mariamman temple ther - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்

சுமார் 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம் எல் ஏ வடம் பிடித்து துவக்கி வைத்தார் சின்ன கடைவீதி பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேல ரத வீதி வடக்கு ரத வீதி கறிக்கடை சந்து மூலக்கடை பகுதி முத்துக்குமரன் நகை மாளிகை ஆகிய பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்றது

தேரோட்டத்தில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர் தேரோட்டம் நடைபெற்ற இடங்களில் பொது மக்களுக்கு நீர்மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது தேரோட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் சேத்தாலி வேஷம் போட்டும் ஊர்வலமாக வந்தனர்

சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மூலக்கடை பகுதியில் வாடிப்பட்டி தாலுகா தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் வழங்கினார்கள்

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

தேரோட்ட நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மருது பாண்டியன் வள்ளி மயில் கொத்தாலம் செந்தில்வேல் ரேகா ராமச்சந்திரன் ஜெனகை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி, வசந்த், கவிதா , பெருமாள் உள்ளிட்டோர் சமயநல்லூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் கண்காணிப்பாளர், சோழவந்தான், காடுபட்டி உதவிக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேரை வடம் பிடித்துச் சென்றனர்.

தேரோட்ட நிகழ்ச்சியை மண்டக படிதாரர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு மற்றும் அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories