பஞ்சாங்கம் ஆக.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Published:

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – ஆக.15

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆடி ~ 30 ( 15.8.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாதம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 8.35 PM வரை த்ருதீயை பின் சதுர்த்தி.
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ காலை 7.03 AM வரை பூரம் பின் உத்தரம்.
யோகம் ~ சிவம்.
கரணம்~ தைதுளை / கரஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00 PM.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 AM.
நல்ல நேரம் ~ 7.30 to 8.30 AM & 4.30 to 5.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.06.
சந்திராஷ்டமம் ~ பகல் 1.02 PM வரை மகரம் பின் கும்பம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ த்ருதீயை.
இன்று ~ சுதந்திர தினம்.

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (15-08-2026) ராசி பலன்கள்


மேஷம்

தனம் சார்ந்த தேவைகள் நிறைவேறும். ஆதரவானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கியில் இருந்து வந்த இழுபறியான சூழல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.9 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : தேவைகள் நிறைவேறும்.
பரணி : வேறுபாடுகள் மறையும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.


ரிஷபம்

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமித்த பணம் உரிய நேரத்தில் கிடைக்கும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்களை தவிர்க்கவும். ஆதரவற்றோருக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதுமையான சில செயல்களில் ஈடுபாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : கருத்துக்களில் கவனம்.
மிருகசீரிஷம் : ஈடுபாடுகள் உண்டாகும்.


மிதுனம்

விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : ஏற்ற இறக்கமான நாள்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


கடகம்

வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும்.
பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.


சிம்மம்

இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உணர்வுபூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மகம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரம் : சுறுசுறுப்பான நாள்.
உத்திரம் : பேச்சுக்களில் கவனம்.


கன்னி

வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : அலைச்சல் மேம்படும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : தடைகளை அறிவீர்கள்.


துலாம்

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.

ALSO READ:  பஞ்சாங்கம் - ஆக.12 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
சுவாதி : பக்குவம் பிறக்கும்.
விசாகம் : கவனம் வேண்டும்.


விருச்சிகம்

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வருமான வாய்ப்புகளை உயர்த்துவீர்கள். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

விசாகம் : உதவிகள் சாதகமாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.


தனுசு

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சமூகம் குறித்த புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். கடன் சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பணி சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.


மகரம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.


கும்பம்

அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : குழப்பம் ஏற்படும்.


மீனம்

உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இணைய துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : நட்பு மேம்படும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.11 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”

  • ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

Related articles

Recent articles

spot_img