
இன்றைய பஞ்சாங்கம் – நவ.29
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
கார்த்திகை~ 13 – ( 29 11.2025* ) சனிக்கிழமை*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ * சரத் ருது.
மாதம் ~ * கார்த்திகை மாதம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 6.02 Pm வரை நவமி பின் தசமி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 10.07 Pm வரை பூரட்டாதி பின் உத்திரட்டாதி
யோகம் ~ வஜ்ரம்
கரணம்~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.17
சந்திராஷ்டமம் ~ 4.16 PM வரை கடகம் பின் சிம்மம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ நவமி
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (29-11-2025) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்
விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : ஆலோசனை கிடைக்கும்.
கிருத்திகை : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்
அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : மதிப்புகள் உயரும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்
வியாபாரத்தில் இருந்த மந்த நிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அசதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மந்த நிலை குறையும்.
திருவாதிரை : ஆதரவுகள் மேம்படும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான செயல்களின் பொறுமை வேண்டும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் உயரும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் அமையும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : வேறுபாடுகள் நீங்கும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மதிப்புகள் உயரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்
பயணங்களால் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
மகம் : அனுபவம் கிடைக்கும்.
பூரம் : குழப்பமான நாள்.
உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : ஆர்வம் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : மதிப்புகள் ஏற்படும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்
உறவுகள் வழியில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர்கல்வியில் ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் மதிப்புகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : தெளிவுகள் பிறக்கும்.
கேட்டை : மதிப்புகள் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்
கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவால் திட்டமிட்ட காரியம் நிறைவேறும். தடங்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : குழப்பங்கள் குறையும்.
பூராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : காரியம் கைகூடும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபார போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடி வரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்
நண்பர்களுக்கும் அனுசரித்து செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் வரவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் உயரும். பொன் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். ஞாபக மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : வரவுகள் உண்டாகும்.
பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!





