
இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 28
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி ~ 14 (28.3.2026) சனிக்கிழமை
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 11.02 am வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 4.47 pm வரை பூசம் பின் ஆயில்யம்
யோகம் ~ சுகர்மம்
கரணம்~ கரஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.17
சந்திராஷ்டமம் ~ தனுர்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ ஏகாதசி
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (28-03-2026) ராசி பலன்கள்
மேஷம்
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். உறவுகள் வழியில் ஒற்றுமை உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தியான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : ஒற்றுமை உண்டாகும்.
பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.
கிருத்திகை : திருப்தியான நாள்.
ரிஷபம்
மனதில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : தெளிவுகள் பிறக்கும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்
பூர்வீக பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் பிறக்கும். பணியாட்களிடம் அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : வரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் தாழ்ந்த மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
பூசம் : கருத்துகளில் கவனம்.
ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கனிவு வேண்டும். இறை வழிபாடுகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : கனிவு வேண்டும்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
கன்னி
கல்வி பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
கல்வியில் மேன்மை ஏற்படும். குழந்தைகளிடம் கனிவு வேண்டும். அறப்பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு ஏற்படும். சுபகாரிய தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் புது உற்சாகத்தைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : கனிவு வேண்டும்.
சுவாதி : தடைகள் விலகும்.
விசாகம் : ஆதரவான நாள்.
விருச்சிகம்
கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உறவினர்கள் வழியில் பொறுமை வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புது விதமான அனுபவங்கள் உருவாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
தனுசு
காதில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகளை தோன்றி மறையும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை தரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : வரவுகள் உண்டாகும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
மகரம்
பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். பிறமொழி மக்களிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சந்திப்புகள் ஏற்படும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : ஏற்ற இறக்கமான நாள்.
கும்பம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசவும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : அனுபவம் ஏற்படும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
மீனம்
வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
பூரட்டாதி : திருப்பங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!



