
இன்றைய பஞ்சாங்கம் – பிப்.14
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
மாசி~ 2 ( 14. 2.2026* ) சனிக்கிழமை*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ * சிசிர ருது.
மாதம் ~ * மாசி மாதம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 4.45 pm வரை த்வாதசி பின் த்ரயயோதசி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 7.03 pm வரை பூராடம் பின் உத்திராடம்
யோகம் ~ ஸித்தி
கரணம்~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.38
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ த்வாதசி
இன்று ~ ப்ரதோஷம்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (14-02-2026) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கால தாமதமாகவே கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்
பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் இன்னல்கள் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மாற்றங்கள் உருவாகும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்
கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் உடல் உழைப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம் நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : உழைப்பு மேம்படும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்
உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சாதுர்த்தியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : அனுபவம் ஏற்படும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்
மனதில் புது விதமாக தன்னம்பிக்கை உருவாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் அனுகூலமும் செல்வாக்கும் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திரம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
அஸ்தம் : செல்வாக்கும் அதிகரிக்கும்.
சித்திரை : புரிதல் மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்
தானிய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அடிப்படை கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். முயற்சிகளில் இருந்து வந்த தாமதமும் படிப்படியாக குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : ஆர்வமின்மை குறையும்.
சுவாதி : வாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்
மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இணைய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : ஒத்துழைப்பான நாள்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்
வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் தூக்கமின்மை சிலருக்கு ஏற்படலாம். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : கற்பனைகள் மேம்படும்.
உத்திராடம் : சஞ்சலங்கள் நீங்கும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்
பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்விப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயண தொடர்பான முயற்சிகள் கைகூடும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்
கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். வெளிநாட்டு பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா நிறம்
அவிட்டம் : லாபங்கள் மேம்படும்.
சதயம் : கட்டுப்பாடுகள் விலகும்.
பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்
சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் கைகூடும்.
உத்திரட்டாதி : நன்மையான நாள்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!




