
இன்றைய பஞ்சாங்கம் – ஆக.06
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:||
பஞ்சாங்கம்
ஆடி ~ 21 (06.8.2022) சனிக்கிழமை
வருடம் ~ சுபக்ருத் {சுபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ கடக மாஸம் {ஆடி மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10.02 pm வரை நவமி பின் தசமி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 2.39 pm வரை விசாகம் பிறகு அனுஷம்
யோகம் ~ சுப்ரம்
கரணம்~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 7.00 ~ 8.00 & 11.00 ~ மதியம் 12.00.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
சூரிய உதயம் ~ காலை 6.05.
சந்திராஷ்டமம் ~ 8.56 am வரை மீனம் பின் மேஷம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்த திதி ~ நவமி
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..
இன்றைய (06-08-2022) ராசி பலன்கள்
.
மேஷம்
—————————————
இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். முக்கியமான முடிவு எடுப்பதை தவிர்க்கவும். விலகி சென்றவர்களை பற்றி சிந்தித்து வருந்துவீர்கள். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கடிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அஸ்வினி : பதற்றம் நீங்கும்.
பரணி : பொறுமையுடன் செயல்படவும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
***
ரிஷபம்
—————————————
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
***
மிதுனம்
—————————————
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.
***
கடகம்
—————————————
எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவுபெறும். வியாபார பணிகளில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றத்தினை உருவாக்குவீர்கள். குலதெய்வ வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : நெருக்கடிகள் ஏற்படும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
***
சிம்மம்
—————————————
குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : அனுகூலம் ஏற்படும்.
***
கன்னி
—————————————
உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : வாய்ப்புகள் அமையும்.
சித்திரை : முடிவு கிடைக்கும்.
***
துலாம்
—————————————
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. பொன், பொருள் சேர்க்கையின் மீது ஆர்வம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.
சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
***
விருச்சிகம்
—————————————
உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
விசாகம் : தெளிவு பிறக்கும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
***
தனுசு
—————————————
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சொத்துக்கள் விற்பதில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம் : அனுபவம் உண்டாகும்.
உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
***
மகரம்
—————————————
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் மேன்மையான சூழல் அமையும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சி ஏற்படும்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.
***
கும்பம்
—————————————
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
சதயம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
***
மீனம்
—————————————
செய்கின்ற முயற்சிகளில் நிதானம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : மந்தமான நாள்.
ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்