பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – மே 16

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

வைகாசி ~ 2 ( 16.5.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாதம் { ரிஷப மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 2.07 am வரை அமாவாஸ்யை பின் ப்ரதமை.
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 5.34 pm வரை பரணி பின் க்ருத்திகை.
யோகம் ~ ஸௌபாக்கியம்
கரணம்~ சதுஷ்பாதம் / நாகவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 5.54
சந்திராஷ்டமம் ~ கன்னி.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ சூன்ய.
இன்று ~ ஸர்வ அமாவாஸ்யை.

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (16-05-2026) ராசி பலன்கள்


மேஷம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் சற்று கவனம் வேண்டும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் உண்டாகும். செயல்திறனில் ஒரு விதமான சோர்வுகள் வெளிப்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : குழப்பங்கள் உண்டாகும்.
கிருத்திகை : உயர்வு ஏற்படும்.


ரிஷபம்

கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய முதலீடு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய உணவுகளை குறைத்துக் கொள்ளவும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வாதங்கள் மறையும்.


மிதுனம்

பொருளாதார நெருக்கடிகள் மறையும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் மறையும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.


கடகம்

புதிய தொழில்நுட்ப தேடல்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் திருப்தியான சூழல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : தேடல்கள் அதிகரிக்கும்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சிம்மம்

உயர்பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கூட்டாளிகளைப் பற்றிய புரிதல் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். வர்த்தக துறைகளில் நிபுணர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் பதற்றமின்றி செயல்படவும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரம் : பொறுமை வேண்டும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கன்னி

வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். மூத்த உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : வருத்தங்கள் நேரிடும்.
அஸ்தம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சித்திரை : சேமிப்புகள் குறையும்.


துலாம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : அறிமுகங்கள் ஏற்படும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : நெருக்கம் மேம்படும்.


விருச்சிகம்

வேகத்தை விட விவேகம் பெரியது என்பதை புரிந்து கொள்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : விவேகம் வேண்டும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : மதிப்புகள் அதிகரிக்கும்.


தனுசு

தேவைக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ரசனைத் தன்மையில் மாற்றம் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : வரவுகள் உண்டாகும்.
பூராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திராடம் : மாற்றங்கள் பிறக்கும்.


மகரம்

எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவெடுக்கவும். கால்நடைகள் மூலம் இலாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத சில பிரச்சினைகள் தோன்றி மறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : இலாபகரமான நாள்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.


கும்பம்

மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத வரவுகள் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். மாறுபட்ட அனுபவங்கள் மூலம் தெளிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : தெளிவுகள் ஏற்படும்.


மீனம்

பழக்க வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”

  • ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Entertainment News

Popular Categories