
இன்றைய பஞ்சாங்கம் – ஜூலை 25
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆடி ~ 9 ( 25.7.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாதம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ பகல் 1.55 PM வரை ஏகாதசி பின் த்வாதசி.
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ காலை 7.32 AM வரை அனுஷம் பின் கேட்டை.
யோகம் ~ ப்ராம்மம்.
கரணம்~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00 PM.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 AM.
நல்ல நேரம் ~ 7.30 to 8.30 AM & 4.30 to 5.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.04.
சந்திராஷ்டமம் ~ மேஷம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ த்வாதசி
இன்று ~ ஸர்வ ஏகாதசி.
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (25-07-2026) ராசி பலன்கள்
மேஷம்
செயல்களில் ஒருவிதமான படபடப்பு உண்டாகும். பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். போக்குவரத்துகளில் விழிப்புணர்வு வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
பரணி : வாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரிஷபம்
பணி சார்ந்த விஷயங்களில் முயற்சிக்கு ஏற்ப புதிய சூழல் ஏற்படும். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கிருத்திகை : புதுமையான நாள்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
கடகம்
பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலை துறைகளில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
சிம்மம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : சந்திப்புகள் ஏற்படும்.
பூரம் : ஆதாயகரமான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். இணைய வழிகளில் வருமானம் மேம்படும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : வருமானம் மேம்படும்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
துலாம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் குறையும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : தாமதங்கள் குறையும்.
விசாகம் : அறிமுகங்கள் உருவாகும்.
விருச்சிகம்
பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் அமையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசாகம் : குழப்பங்கள் உண்டாகும்.
அனுஷம் : புதுமையான நாள்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
தனுசு
மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். லாபம் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூராடம் : அனுகூலம் ஏற்படும்.
உத்திராடம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
மகரம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திராடம் : வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : திருப்தி உண்டாகும்.
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். தடைப்பட்ட சில வேலைகள் முடியும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : போட்டிகள் குறையும்.
பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மீனம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். தள்ளிப்போன சுப காரியம் கைகூடி வரும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூக நிகழ்வுகளால் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : மதிப்புகள் ஏற்படும்.
ரேவதி : புதுமையான நாள்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!




