
செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் காலை 8மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாய் கிளினிக் சித்தமருத்துவா் கலா ஏற்பாட்டில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. அதனை தொடா்ந்து ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது.
பின்னா் திருவாசகி சிவபகவதி தலைமையில் குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6மணிக்கு உலக நன்மை வேண்டி மாபெரும் திருவிளக்கு வழிபாடு நடந்தது. முதல் திருவிளக்கினை சித்த மருத்துவா் டாக்டர் சிந்து (எம்டிஎஸ்) .ஏற்றி துவக்கி வைத்தார்.
திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியை முத்துலெட்சுமி, ஸ்ரீதேவி, புனிதா, பழனியம்மாள் பேச்சியம்மாள், போட்டோகிரியேட்டர்தேவி, உஷா ஆகியோர் நடந்தினா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் தங்கையா, இராம்நாத், ஆடிட்டர் சங்கர், கோபாலகிருஷ்ணன், ராஜகோபால், குருவூர்கண்ணன், வீரபுத்திரன், கணேசன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.
திருவிளக்கு வழிபாட்டில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.



