இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 14
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி ~* *1 (14.3.2024 ) வியாழன் கிழமை.
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாஸம் {மீன மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 7.01 am வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 10.27 pm வரை பரணி பின் கிருத்திகை
யோகம் ~ வைத்ருதி
கரணம் ~ பத்ரம் பவம்
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.24
சந்திராஷ்டமம் ~ கன்னி
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ சூன்ய
இன்று ~ காரடையார் நோன்பு சரடு கட்டிக்கொள்ள நல்லநேரம் 14-3-2024 வியாழன் காலை 10:45 முதல் 11:45 மணிக்குள் அனுஷ்டிக்கவும்.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இன்றைய (14-03-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனை மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : முயற்சிகள் ஈடேறும்.
கிருத்திகை : சிந்தனை மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
உத்தியோகப் பணிகளில் ஈடுபாடு குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புத்துணர்ச்சி உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஈடுபாடு குறையும்.
ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முதலீடு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். பக்குவம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : அபிவிருத்தியான நாள்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.
பூசம் : துரிதம் உண்டாகும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரம் : தீர்வு கிடைக்கும்.
உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் புதிய தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : மந்தமான நாள்.
சித்திரை : விரயங்கள் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ரகசியங்களை அறிவீர்கள்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
விசாகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அனுஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
உயர் கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : பயணங்கள் கைகூடும்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : சேமிப்பு மேம்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் சில சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரப் பணிகளில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். வாக்கு சாதுரியத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். தேர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : இன்னல்கள் குறையும்.
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
புதிய துறை சார்ந்த தேடல் ஏற்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : தேடல் ஏற்படும்.
சதயம் : நம்பிக்கையான நாள்.
பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான எண்ணம் உண்டாகும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். அடமான பொருட்கள் பற்றிய சிந்தனை மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
ரேவதி : தனவரவுகள் கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.