பஞ்சாங்கம் செப்.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

Published:

Astrological symbols and horoscope chart
astrology panchangam rasipalan

இன்றைய பஞ்சாங்கம் – செப்.01

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி~ 15 ( 1.9.2026 ) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பரபாவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாஸம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 7.56 AM வரை சதுர்த்தி பின் பஞ்சமி.
நாள் ~ { பௌம வாஸரம் } செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ மறுநாள் காலை 3.34 AM வரை அச்வினி பின்னர் பரணி.
யோகம் ~ வ்ருத்தி
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30 PM.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 AM and 4.30 to 5.30 PM.
குளிகை ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
சூரியஉதயம் ~ காலை 6.06.
சந்திராஷ்டமம்~ கன்னி.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி.
இன்று ~


இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

astrology - 2026

இன்றைய (01-9-2026) ராசி பலன்கள்


மேஷம்

மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். குடும்பப் பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

அஸ்வினி : நிதானம் வேண்டும்.
பரணி : நெருக்கடியான நாள்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரிஷபம்

பணிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமித்தமான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமைப் பேச்சுகளைக் குறைத்துக்கொள்ளவும். உலக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : திருப்பங்கள் உண்டாகும்.
ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


மிதுனம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளின் காரணத்தைக் கண்டறிவீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டுப் பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.29 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள்.
திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.


கடகம்

பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : அனுபவம் வெளிப்படும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.


சிம்மம்

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : மாற்றம் பிறக்கும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.


கன்னி

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும் அனுபவம் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
அஸ்தம் : சேமிப்புகள் குறையும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.


துலாம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சுபச் செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்

சித்திரை : சுறுசுறுப்பான நாள்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


விருச்சிகம்

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : புரிதல் மேம்படும்.
கேட்டை : மேன்மையான நாள்.


தனுசு

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழைய நிகழ்வுகள் மூலம் மனம் மகிழ்வீர்கள். உலக நிகழ்வுகள் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

ALSO READ:  பஞ்சாங்கம் - ஆக.26 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.


மகரம்

தொழில் நிமித்தமான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வீடு மற்ற எண்ணம் மேம்படும். நறுமண பொருள்கள் வழியும் ஆதாயம் அடைவீர்கள். விவசாய பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். தர்ம காரியத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : முடிவுகள் பிறக்கும்.
திருவோணம் : ஈர்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


கும்பம்

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். குறுகிய தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.


மீனம்

பயனற்ற சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திட்டமிட்ட பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு ஈடேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மறைமுகமான ஆதரவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் மறையும்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : ஆதரவுகள் ஏற்படும்.


தினம் ஒரு திருக்குறள்

vainava valluvar dhinam oru thirukkural - 2026

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

sivan - 2026

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.27 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

srirangam pagal pathu day 9 - 2026

திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்

இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

Related articles

Recent articles

spot_img