
இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 31
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (31-3-2026) ராசி பலன்கள்
மேஷம்
நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். புகழ் ஓங்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
அஸ்வினி : மனக்குழப்பம் நீங்கும்.
பரணி : வீட்டை புதுப்பிப்பீர்கள்.
கிருத்திகை : நிதானம் தேவை.
ரிஷபம்
வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். வெற்றி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : காரிய சித்தி உண்டாகும்.
ரோகிணி : தடைகள் அகலும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம்
உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வருவாய் மேம்பாடு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். நெருக்கடியான சூழல்கள் படிப்படியாக மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : வருமானம் உயரும்.
திருவாதிரை : நிம்மதி பெருகும்.
புனர்பூசம் : திட்டங்கள் நிறைவேறும்.
கடகம்
தடைபட்ட வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ரகசியம் காக்கவும்.
பூசம் : மதிப்புகள் கூடும்.
ஆயில்யம் : தனலாபம் உண்டாகும்.
சிம்மம்
திடீர் சுபசெய்திகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். சமூகப் பணிகளில் கோபம் இன்றி பொறுமையுடன் இருக்கவும். வர்த்தக பணிகளில் நிதானம் வேண்டும். அமைதி நிலவும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மகம் : பொறுமை காக்கவும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : கவனம் தேவை.
கன்னி
வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சமூகப் பணியில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். செலவு கூடும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
உத்திரம் : செலவுகள் கூடும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
துலாம்
வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளும் ஒத்துழைப்பும் உருவாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தாமதம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : பாராட்டு கிடைக்கும்.
சுவாதி : சுபச் செய்திகள் வரும்.
விசாகம் : சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் மேம்படும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் மறையும். இயந்திர பழுதுகளை சரி செய்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். சேவை துறைகளில் இருப்போர்க்கு மேன்மை ஏற்படும். ஆதரவு பெருகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
விசாகம் : நிம்மதி உண்டாகும்.
அனுஷம் : குழப்பங்கள் மறையும்.
கேட்டை : ஆதரவு பெருகும்.
தனுசு
ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார நிலுவை பாக்கிகள் வசூலாகும். சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உயர்வு காணும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மூலம் : அனுகூலம் ஏற்படும்.
பூராடம் : பாக்கிகள் வசூலாகும்.
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
மகரம்
நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். வருமானப் பற்றாக்குறை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். அலைச்சல் மிகுந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
உத்திராடம் : போராட்டமான நாள்.
திருவோணம் : விழிப்புணர்வு தேவை.
அவிட்டம் : செலவுகள் கூடும்.
கும்பம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உருவாகும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயர் கல்வியில் இருந்த இன்னல்கள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : இன்னல்கள் நீங்கும்.
பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.
மீனம்
இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உணர்வுபூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
பூரட்டாதி : வரவுகள் உண்டு.
உத்திரட்டாதி : கவனம் தேவை.
ரேவதி : அமைதி காக்கவும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!





nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.