
இன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 2
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி~ 19
( 2.6.2026 ) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பரபாவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ மாலை 6.37 pm த்விதீயை பின் த்ருதீயை.
நாள் ~ { பௌம வாஸரம் } செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ இரவு 9.52 pm வரை மூலம் பின் பூராடம்.
யோகம் ~ ஸாத்தம்.
கரணம் ~ கரஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 5.52
சந்திராஷ்டமம்~ வ்ருஷபம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்விதீயை.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (2-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
நீண்ட நாள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் சாதகமாக வரும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து, லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்களால் மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : சிக்கல்கள் தீரும்.
கிருத்திகை : பாராட்டு கிடைக்கும்.
ரிஷபம்
வீடு, வாகனம் தொடர்பான சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம். சிறு மருத்துவச் செலவுகள் வரலாம். எதிர்பாராத சில தடைகளுக்குப் பிறகு எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், உங்கள் உழைப்புக்கான பலன் உண்டாகும். காப்பீடு அல்லது உயில் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளை நிதானமாகச் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.
ரோகிணி : தடைகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
மிதுனம்
இளைய சகோதரர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். குறுகிய தூரப் பயணங்கள் லாபகரமாக அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தகவல் தொடர்பு மற்றும் எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : முடிவுகள் பிறக்கும்.
கடகம்
பொருளாதார ரீதியாகச் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பேச்சாற்றலால் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி ஒருமித்த கருத்து உருவாகும். பழைய கடன்களைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தவும். சேமிப்புத் திட்டங்களில் முதலீடு குறித்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் இருக்கும்.
பூசம் : குழப்பங்கள் நீங்கும்.
ஆயில்யம் : தடைகள் விலகும்.
சிம்மம்
சுயமாக முடிவெடுத்துச் செயல்படுவதன் மூலம் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். அவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். புதிய ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் தொடங்கும். மனதிற்குப் பிடித்தமானவர்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : லாபகரமான நாள்.
பூரம் : பொலிவு கூடும்.
உத்திரம் : தடைகள் விலகும்.
கன்னி
ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்காகப் பணம் செலவிட நேரிடும். வீடு அல்லது வசிப்பிடத்தை மாற்றும் எண்ணம் உருவாகலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் விழிப்புடன் இருப்பது அவசியம். நீண்ட தூரப் பயணங்கள் அல்லது வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது தேவையற்ற மனவருத்தத்தைத் தவிர்க்கும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும் என்பதால் ரகசியங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : விழிப்புணர்வு அவசியம்.
அஸ்தம் : பயணம் சாதகம்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
துலாம்
மூத்த சகோதரர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும். புதிய வருமான வழிகள் பிறக்கும். குறுகிய காலப் பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். தகவல் பரிமாற்றங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் தென்படும். மனதிற்குத் தெளிவான சிந்தனை பிறக்கும். சமூக வலைத்தளங்கள் மூலம் நல்ல அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : வருமானம் அதிகரிக்கும்.
சுவாதி : கோரிக்கைகள் நிறைவேறும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.
விருச்சிகம்
தொழில் வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். முக்கியமான முடிவுகளை எடுக்க மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிலவி வந்த மந்த நிலை மாறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வருமானம் சீராக இருப்பதால் பணத்தேவைகள் தடையின்றிப் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : அந்தஸ்து உயரும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
தந்தையார் வழி உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் வரும். தொலைதூரப் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
திடீர் பண வரவுகள் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும், இறுதியில் காரியங்கள் உங்களுக்குச் சாதகமாகவே முடியும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. இன்சூரன்ஸ் அல்லது வரி தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் மாற்றங்களைக் குறித்துச் சிந்திப்பீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : ரகசியங்களில் கவனம்.
அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.
கும்பம்
வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான சூழல் நிலவும். ஒருவருக்கொருவர் புரிதல் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்து சேருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவதால் புகழும் செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கைகூடும். நண்பர்களின் ஆதரவு பெரும் பலமாக இருக்கும். பழைய பகைகள் மறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : புரிதல் அதிகரிக்கும்.
சதயம் : செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.
மீனம்
எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை ஈட்டுவீர்கள். பழைய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். கடன் தொல்லைகள் குறைந்து பொருளாதார நிலை சீராகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!





nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.