
இன்றைய பஞ்சாங்கம் – டிச.2
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
கார்த்திகை~ 16 (2. 12.2025) செவ்வாய் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம் ~ கார்த்திகை மாஸம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
*திதி ~ 12.31 pm வரை த்வாதசி பின் த்ரயோதசி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ 6.26 pm வரை அஸ்வினி பின் பரணி
யோகம் ~ வரியான்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.19
சந்திராஷ்டமம்~ கன்னி
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி
இன்று * ~ ப்ரதோஷம்
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (2-12-2025) ராசி பலன்கள்
மேஷம்
திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : தாமதம் உண்டாகும்.
பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.
கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
ரிஷபம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும் வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.
ரோகிணி : பயணங்களில் கவனம்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
மிதுனம்
மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் ஏற்படும். பணியில் இருந்த பொறுப்புகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.
கடகம்
பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதார மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். நன்மை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுகூலம் ஏற்படும்.
பூசம் : உதவிகள் சாதகமாகும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : புரிதல் அதிகரிக்கும்.
பூரம் : தாமதம் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.
கன்னி
சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒரு விதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். கணித தொடர்பான துறைகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : பதற்றங்கள் நீங்கும்.
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
துலாம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
விசாகம் : தெளிவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
அனுஷம் : கையிருப்புகள் மேம்படும்.
கேட்டை : வேறுபாடுகள் மறையும்.
தனுசு
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வருவாயை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
மூலம் : ஈடுபாடு ஏற்படும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சரிவை சரி செய்வதற்கான சூழல்கள் உண்டாக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்
உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : மதிப்புகள் உயரும்.
கும்பம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
மீனம்
குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
ரேவதி : பேச்சுகளில் கவனம்.

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!






nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.