
இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 22
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை~ 9 (22. 4.2025) செவ்வாய் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 1.35 pm வரை நவமி பின் தசமி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ 8.24 am வரை திருவோணம் பின் அவிட்டம்
யோகம் ~ சுபம்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.02
சந்திராஷ்டமம்~ மிதுனம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ தசமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (22-4-2025) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் !
உறவுகளிடத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : காரியங்கள் கைகூடும்.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : மதிப்பு உயரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் !
ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைகளில் ஆதாயம் ஏற்படும். சபை தலைவராக இருப்பவர் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் !
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணி பொறுப்புகளால் உடல் அசதி ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதால் மனதில் அமைதி உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் !
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் !
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
மகம் : வருவாய் மேம்படும்.
பூரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்திரம் : கவலைகள் குறையும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் !
உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : சிந்தனை அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : லாபம் மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் !
சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல் தோன்றும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உணவு துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : தெளிவு உண்டாகும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : அமைதியான நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் !
செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மறைமுகமான எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : திருப்தியான நாள்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் !
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உணவு செயல்களில் கவனம் வேண்டும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றம் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் நிறம்
மூலம் : புரிதல் ஏற்படும்.
பூராடம் : வரவுகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் !
உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்கவும். புதிய முடிவுகளை எடுப்பதில் ஆலோசனை பெற்று செயல்படவும். பணியாட்களின் விஷயங்களில் நிதானத்தை கையாளவும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மறதி சார்ந்த பிரச்சனைகளால் குழப்பங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : நிதானத்தை கையாளவும்.
அவிட்டம் : குழப்பங்கள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் !
நண்பர்களின் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : விவாதங்கள் நீங்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் !
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பேச்சுக்களுக்கு மதிப்பு கிடைக்கும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால வைப்பு நிதிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மதிப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!
nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.