
இன்றைய பஞ்சாங்கம் – பிப்.17
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
மாசி~ 05 (17. 2.2026) செவ்வாய் கிழமை.**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ *சிசிர * ருது.
மாதம் ~ மாசி மாஸம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
*திதி ~ 6.32 pm வரை அமாவாசை பின் ப்ரதமை
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ 10.20 pm வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ பரிகம்
கரணம் ~ நாகவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.37
சந்திராஷ்டமம்~ 10.04 am வரை மிதுனம் பின் கடகம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ அமாவாசை
இன்று * ~ அமாவாசை
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (17-2-2026) ராசி பலன்கள்
மேஷம்
வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். தடைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.
பரணி : ஈடுபாடு ஏற்படும்.
கிருத்திகை : குழப்பங்கள் குறையும்.
ரிஷபம்
குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அமைதியான செயல்கள் உங்கள் மதிப்பை மேம்படுத்தும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : மதிப்புகள் மேம்படும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : அலைச்சல் உண்டாகும்.
மிதுனம்
முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் ஏற்படும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : தடைகள் குறையும்.
திருவாதிரை : அபிவிருத்தியான நாள்.
புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும்.
கடகம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் ஓரளவு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : சிக்கல்கள் குறையும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சிம்மம்
குழந்தைகள் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பணிகளில் லாபத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கைகூடும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : கலகலப்பான நாள்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் கைகூடும்.
கன்னி
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகள் மூலம் அலைச்சல் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திரம் : பிரச்சினைகள் குறையும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
துலாம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : இன்னல்கள் குறையும்.
சுவாதி : நெருக்கமான நாள்.
விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
விருச்சிகம்
புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : மாற்றம் பிறக்கும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகத்தைவிட விவேகம் அவசியம். எதிலும் திருப்தி அற்ற சூழ்நிலைகள் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். துயரம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மகரம்
உடன் இருப்பவர்களினால் எதிர்பாராத செலவுகளும் நெருக்கடிகளும் உண்டாகும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : நெருக்கடியான நாள்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
கும்பம்
சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் அகலும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரிய தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.
சதயம் : குழப்பங்கள் குறையும்.
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
மீனம்
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாகன பயணத்தால் அனுகூலம் ஏற்படும். செய்தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனைகள் பிறக்கும். எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடை மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் பிறக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!





nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.