
இன்றைய பஞ்சாங்கம் – செப்.15
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆவணி~ 29 ( 15.9.2026 ) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பரபாவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ காலை 9.22 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி.
நாள் ~ { பௌம வாஸரம் } செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ மாலை 5.44 PM வரை ஸ்வாதி பின் விசாகம்.
யோகம் ~ மாஹேந்த்ரம்.
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்.
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30 PM.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 AM and 4.30 to 5.30 PM.
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30 PM.
சூரியஉதயம் ~ 6.06 AM.
சந்திராஷ்டமம்~ மீனம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (15-9-2026) ராசி பலன்கள்
மேஷம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டில் சிறுசிறு மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு உத்வேகத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இறை வழிபாடு மனத்தெளிவினை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
அஸ்வினி : பயணங்கள் உண்டாகும்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : தெளிவுகள் ஏற்படும்.
ரிஷபம்
வியாபார பணிகளில் புதிய நபரின் அறிமுகங்கள் உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : அறிமுகங்கள் உண்டாகும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
மிதுனம்
வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பு மேம்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பணி புரிபவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
கடகம்
ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதளவில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமயோசிதமான செயல்பாடுகள் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எடுத்துச் செல்லும் உடமைகளில் சற்று கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : திறமைகள் வெளிப்படும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
சிம்மம்
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : வெற்றிகரமான நாள்.
பூரம் : துரிதம் உண்டாகும்.
உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் மறையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழில் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : குழப்பம் மறையும்.
அஸ்தம் : தாமதம் மறையும்.
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
துலாம்
வியாபார நிமித்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : மாற்றம் ஏற்படும்.
விசாகம் : மறதி நீங்கும்.
விருச்சிகம்
நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் காணப்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயண செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களையும் வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
விசாகம் : மாற்றங்கள் காணப்படும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
தனுசு
மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர் வகையில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : போட்டிகள் விலகும்.
பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
மகரம்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மேம்படும். சில மாற்றங்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சாதுர்யமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : இழுபறிகள் மறையும்.
கும்பம்
நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். கடன் செயல்களில் விவேகம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
மீனம்
உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஒருவிதமான படபடப்பு, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெரியவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!



Leave a Reply