
இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 21
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை~ 08 (21.4.2026) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பராபவ வருடம் {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாஸம் {மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 8.47 am வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ 6.15 am வரை ரோஹினி பின் மறுநாள் அதிகாலை 4.37 am வரை ம்ருகசீர்க்ஷம்
யோகம் ~ சோபனம்.
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.02
சந்திராஷ்டமம்~ 5.23 pm வரை துலாம் பின் விருச்சிகம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (21-4-2026) ராசி பலன்கள்
மேஷம்
பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். மற்றவைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : உத்வேகமான நாள்.
பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரிஷபம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மூத்த உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.
ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
மிதுனம்
குடும்பத்தில் சுபகாரிய செலவுகள் உண்டாகும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிடிவாத குணத்தை குறைத்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபரம் செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். அச்சம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
கடகம்
பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். சிந்தனைகளை செயல்பாடுகளில் மாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : தெளிவுகள் ஏற்படும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : லாபங்கள் மேம்படும்.
சிம்மம்
குடும்பத்தில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் மேம்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
உத்திரம் : மதிப்புகள் மேம்படும்.
கன்னி
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண முயற்சிகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
துலாம்
எண்ணிய பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்மறை கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் மந்தமான சூழல் நடைபெறும். உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதளவில் சஞ்சளம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
சித்திரை : தாமதம் ஏற்படும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : சஞ்சளம் ஏற்படும்.
விருச்சிகம்
புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதை உறுத்திய பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
விசாகம் : அறிமுகங்கள் ஏற்படும்.
அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
கேட்டை : நெருக்கடிகள் குறையும்.
தனுசு
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். உத்தியோக முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். எதிர்பாலின மக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
மகரம்
எண்ணங்களில் புதிய தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் புரிதல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். கால்நடை மூலம் அலைச்சல் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சதயம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
மீனம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும். அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வியாபாரம் பணிகளில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொத்து விற்பது தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : துரிதம் உண்டாகும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!





nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.