
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – டிச.01
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
கார்த்திகை ~ .. 15 ( 1.12.2025 ) திங்கள் கிழமை*
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ கார்த்திகை மாஸம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 2.37 pm வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 7.54 pm வரை ரேவதி பின் அஸ்வினி
யோகம் ~ வ்யதிபாதம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.18
சந்திராஷ்டமம் ~ சிம்மம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ திதித்வயம் ஏகாதசி த்வாதசி
இன்று ~ கைசிக ஏகாதசி
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (01-12-2025) ராசி பலன்கள்
மேஷம்
மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : பயணங்கள் உண்டாகும்.
கிருத்திகை : புரிதல்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்
மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகள் நல்ல மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
கிருத்திகை : புத்துணர்ச்சி பிறக்கும்.
ரோகிணி : வசதிகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் மேம்படும்.
மிதுனம்
சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் மேம்படும். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களால் சில பணிகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுபவம் ஏற்படும்.
புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
கடகம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். வருத்தம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.
பூசம் : பிரச்சனைகள் மறையும்.
ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்
மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டும் நிங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மகம் : செயல்பாடுகளில் கவனம்
பூரம் : வரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : திருப்பங்கள் ஏற்படும்.
கன்னி
சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : ஆதாயகரமான நாள்.
அஸ்தம் : சிக்கல்கள் குறையும்.
சித்திரை : தாமதங்கள் விலகும்.
துலாம்
சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
சித்திரை : தாமதங்கள் விலகும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
விருச்சிகம்
பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்புங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
அனுஷம் : அறிமுகம் ஏற்படும்.
கேட்டை : திருப்பங்கள் ஏற்படும்.
தனுசு
நினைத்த பணிகளில் இருந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : தடைகள் குறையும்.
பூராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
மகரம்
சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறு துர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : பொலிவு மேம்படும்.
சதயம் : உதவிகள் சாதகமாகும்.
பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
மீனம்
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உருவாக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : ஏற்ற இறக்கமான நாள்.
ரேவதி : கவனம் வேண்டும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!






It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.