
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஆக.10
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆடி ~ 25 ( 10.8.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆடி மாஸம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 6.42 AM வரை த்வாதசி பின் மறுநாள் காலை 4.22 AM த்ரயோதசி பின்னர் சதுர்தசி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ பகல் 12.02 PM வரை திருவாதிரை பின் புனர்பூசம்.
யோகம் ~ வஜ்ரம்.
கரணம் ~ தைதுளை / கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ காலை 6.05.
சந்திராஷ்டமம் ~ வ்ருச்சிகம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி.
இன்று ~ ப்ரதோஷம்.
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (10-8-2026) ராசி பலன்கள்
மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நவீன தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்த நிலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : ஈடுபாடு மேம்படும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : மந்தநிலைகள் குறையும்.
ரிஷபம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பாடங்களில் இருந்த ஆர்வமின்மை குறையும். மறதி பிரச்சனைகள் விலகும். கமிஷன் துறைகளில் ஆதாயம் பயன்படும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
கிருத்திகை : சந்திப்புகள் ஏற்படும்.
ரோகிணி : பிரச்சனைகள் விலகும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் பிறக்கும்.
மிதுனம்
பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமாக முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : முதலீடுகளில் கவனம்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
கடகம்
உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூசம் : கருத்துக்களில் கவனம்.
ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும்.
சிம்மம்
மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தன வரவுகளில் இருந்த தாமதங்கள் விலகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
மகம் : குழப்பங்கள் நீங்கும்.
பூரம் : தாமதங்கள் விலகும்.
உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.
கன்னி
பணிகளில் துரிதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
அஸ்தம் : குழப்பங்கள் விலகும்.
சித்திரை : லாபம் மேம்படும்.
துலாம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். பிள்ளைகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அலுவலகத்தில் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தான தர்ம காரியங்களில் சில புரிதலும் ஆர்வமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : சோர்வுகள் குறையும்.
சுவாதி : மாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
உத்தியோக பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு பணிகளில் இழுபறியான சூழல்கள் காணப்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான விஷயங்களை பொறுமையுடன் கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
விசாகம் : தாமதம் ஏற்படும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
தனுசு
மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுப காரியம் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். தாயாரிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூராடம் : வேறுபாடுகள் குறையும்.
உத்திராடம் : புரிதல்கள் உண்டாகும்.
மகரம்
மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் நிமித்தமான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் குறையும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
கும்பம்
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : கனவுகள் நிறைவேறும்.
மீனம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். வேலை சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கப்பெறும். பழைய விஷயங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கூட்டாளிகளிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : வேறுபாடுகள் குறையும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

