
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – பிப்.16
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
மாசி ~ .. 4 ( 16.2.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ மாசி மாஸம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.27 pm வரை சதுர்த்தசி பின் அமாவாசை
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 9.44 pm வரை திருவோணம் பின் அவிட்டம்
யோகம் ~ வரியான்
கரணம் ~ சகுனி
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.37
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தசி
இன்று ~ போதாயன அமாவாசை
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (16-2-2026) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்
சேவை பணிகளில் அனுகூலம் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தொழில் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அனுகூலமான நாள்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : தாமதங்கள் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்
பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்
பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : குழப்பங்கள் விலகும்.
திருவாதிரை : தேவைகள் பூர்த்தியாகும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்
மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்
கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளை விற்பனை செய்வதில் மூலம் லாபம் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்
பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அஸ்தம் : பொறுப்புகள் கிடைக்கும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்
மறைமுகமான செயல்களில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உதவிகள் மூலம் லாபங்கள் மேம்படும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : லாபங்கள் மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்
வரவுக்கேற்ற செலவு விரயமும் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் எண்ணங்களை மற்றவரிடம் திணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மூலம் : சிந்தனைகளில் கவனம்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்
வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : திருப்தியான நாள்.
திருவோணம் : குழப்பம் நீங்கும்.
அவிட்டம் : கட்டுப்பாடுகள் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : ஆர்வம் ஏற்படும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்
உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பயணம் சார்ந்த செயல்களில் அனுபவம் கிடைக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!




It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.