பஞ்சாங்கம் செப்.07 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Published:

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – செப்.07

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 21 ( 7.9.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம்~ ஆவணி மாஸம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ மாலை 4.37 PM வரை ஏகாதசி பின்னர் த்வாதசி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ மாலை 6.35 PM வரை புனர்பூசம் பின்னர் பூசம்.
யோகம் ~ வ்யதீபாதம் / வரீயான்.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ UPTO 12.56 PM வரை வ்ருச்சிகம் பின்னர் தனுர்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~
ஏகாதசி.
இன்று ~ ஸர்வ ஏகாதசி.

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (07-9-2026) ராசி பலன்கள்


மேஷம்

உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். கால்நடை வளர்ப்பு பற்றிய சிந்தனைகள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயத் துறைகளில் மேன்மை ஏற்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.03 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

அஸ்வினி : வேறுபாடுகள் குறையும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : மேன்மையான நாள்.


ரிஷபம்

முயற்சிகளில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.


மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். வெளி உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் புதிய முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : அறிமுகங்கள் உண்டாகும்.


கடகம்

அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.


சிம்மம்

புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். போட்டி தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் மூலம் அமைதியின்மை ஏற்படும். வர்த்தக தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் லாபங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : மாற்றமான நாள்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : லாபங்கள் உண்டாகும்.


கன்னி

கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்கள் மூலம் சேமிப்புகள் மேம்படும். சேமிப்பு விசயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மைகள் வெளிப்படும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.04 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சேமிப்புகள் மேம்படும்.
அஸ்தம் : செல்வாக்கு மேம்படும்.
சித்திரை : புதுமையான நாள்.


துலாம்

வியாபார பணிகளில் தன வரவுகளும் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். வர்த்தக பணிகளில் லாபங்கள் மேம்படும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்.


விருச்சிகம்

வெளியூர் பயணங்களால் அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடன் பிறந்தவர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். வேலை நிமித்தமாக முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். செய்யும் முயற்சியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

விசாகம் : அனுபவம் ஏற்படும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


தனுசு

திடீர் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : வாதங்களை குறைக்கவும்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


மகரம்

பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவுகள் ஏற்படும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

உத்திராடம் : ஆதரவுகள் ஏற்படும்.
திருவோணம் : ஒத்துழைப்பான நாள்.
அவிட்டம் : லாபம் மேம்படும்.


கும்பம்

எடுத்து செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் வசதிகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி லாபத்தை மேம்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.30 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அவிட்டம் : உடமைகளில் கவனம்
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : லாபம் மேம்படும்.


மீனம்

கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : லாபகரமான நாள்.
ரேவதி : புரிதல் மேம்படும்.


thiruvalluvar 1 - 2026

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

Related articles

Recent articles

spot_img