
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஜூலை 27
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆடி ~ 11 ( 27.7.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆடி மாஸம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ மாலை 5.47 PM வரை த்ரயோதசி பின் சதுர்தசி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ பகல் 12.38 PM வரை மூலம் பின் பூராடம்.
யோகம் ~ வைத்ருதி.
கரணம் ~ தைதுளை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ காலை 6.04.
சந்திராஷ்டமம் ~ வ்ருஷபம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி.
இன்று ~ வாஸ்து நாள் நேரம்
காலை 7.42 முதல் 8.18 வரை
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (27-7-2026) ராசி பலன்கள்
மேஷம்
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன்கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செயல்படவும். செயல்பாடுகளில் ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : அலைச்சல் ஏற்படும்.
கிருத்திகை : சேமிப்புகள் குறையும்.
ரிஷபம்
வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : விவேகத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
மிதுனம்
சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்று தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்
சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்டதிசை : மேற்கு
அதிர்ஷ்டஎண் : 5
அதிர்ஷ்டநிறம் : சாம்பல் நிறம்
மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
கன்னி
உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தாயாருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
உத்திரம் : மேன்மை ஏற்படும்.
அஸ்தம் : சோர்வுகள் குறையும்.
சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும்.
துலாம்
இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : விவேகம் வேண்டும்.
விசாகம் : ஆதாயகரமான நாள்.
விருச்சிகம்
செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகளை வெற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : வரவுகள் கிடைக்கும்.
அனுஷம் : ஆதரவுகள் மேம்படும்.
கேட்டை : நிம்மதி பிறக்கும்.
தனுசு
அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூராடம் : சேமிப்புகள் குறையும்.
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
மகரம்
மறுசுழற்சி சார்ந்த பொருட்கள் மூலம் விரயம் ஏற்படும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். மறைவான சில பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : விரயம் ஏற்படும்.
திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
கும்பம்
உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சதயம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.
மீனம்
அரசுத்துறை பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மகளுக்கு சுபகாரிய செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
ரேவதி : திருப்தியான நாள்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!




It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.