
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 29
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ~ 15 ( 29.6.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆனி மாஸம் { மிதுன மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ பௌர்ணமி (முழுவதும்) பின் மறுநாள் காலை 5.57 AM வரை பௌர்ணமி தொடர்கிறது.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ மறுநாள் காலை 5.17 AM வரை மூலம் பின் பூராடம்.
யோகம் ~ சுப்ரம்.
கரணம் ~ பத்திரை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ காலை 5.57.
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ பௌர்ணமி.
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (29-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
தகவல் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : புரிதல் மேம்படும்.
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரிஷபம்
வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இணையம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : விவேகம் வேண்டும்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் குறையும்.
மிதுனம்
சவாலான பணிகளையும் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருவாதிரை : தெளிவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும்.
கடகம்
நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : தீர்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
மறைமுகமான எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் நம்பிக்கை மேம்படும். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : நம்பிக்கை மேம்படும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
பயணங்களில் அனுபவமும் அனுகூலமும் உருவாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பும் ஆதாயமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திரம் : அனுகூலம் உருவாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : ஆதாயகரமான நாள்.
துலாம்
மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : தன்னம்பிக்கை உண்டாகும்.
சுவாதி : ஆர்வம் உண்டாகும்.
விசாகம் : குழப்பங்கள் குறையும்.
விருச்சிகம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : நம்பிக்கையை மேம்படுத்தும்.
அனுஷம் : அலைச்சல் ஏற்படும்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.
தனுசு
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இணைய துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
மூலம் : தெளிவு பிறக்கும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
மகரம்
சமூகத் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : செயல்பாடுகள் அதிகரிக்கும்.
கும்பம்
சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும்.. வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு பணிகளில் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் திருப்தி அற்ற மன நிலைகள் ஏற்பட்டு நீங்கும். சமூகத் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : லாபங்கள் மேம்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உருவாகும்.
ரேவதி : மதிப்புகள் மேம்படும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!





It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.