
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஜூலை 13
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ~ 29 ( 13.7.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆனி மாஸம் { மிதுன மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ மாலை 6.51 PM வரை சதுர்தசி பின் அமாவாஸ்யை
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ மறுநாள் காலை 3.48 AM வரை திருவாதிரை பின் பனர்பூசம்.
யோகம் ~ த்ருவம்.
கரணம் ~ பத்திரை / சகுனி / சதுஷ்பாதம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ காலை 6.00.
சந்திராஷ்டமம் ~ விருச்சிகம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்தசி.
இன்று ~ போதாயன அமாவாஸ்யை
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (13-7-2026) ராசி பலன்கள்
மேஷம்
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அஸ்வினி : அமைதி மேம்படும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். வித்தியமான பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத உதவிகள் நண்பர்களால் கிடைக்கும். பேச்சுகளில் கனிவு வேண்டும். புதிய நபர்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : போட்டிகள் குறையும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.
மிதுனம்
எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்களை அறிவீர்கள். மனதளவில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : ஆதாயம் ஏற்படும்.
புனர்பூசம் : கட்டுப்பாடுகள் குறையும்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
சிம்மம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மகம் : எண்ணங்கள் கைகூடும்.
பூரம் : அனுகூலம் ஏற்படும்.
உத்திரம் : வேறுபாடுகள் குறையும்.
கன்னி
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும். அனுபவ பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
துலாம்
சகோதரர்களின் வகையில் நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : நன்மைகள் ஏற்படும்.
சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.
விசாகம் : பொறுப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
பேச்சுக்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பங்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : குழப்பங்கள் உண்டாகும்.
அனுஷம் : விரயங்கள் உண்டாகும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
தனுசு
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் பயணத்தில் சிந்தித்து செயல்படவும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும்.
மகரம்
பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : குழப்பங்கள் விலகும்.
அவிட்டம் : அனுகூலங்கள் பிறக்கும்.
கும்பம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்கால தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.
சதயம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
மீனம்
கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். வாகன தொடர்பான பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!





It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.