
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 2
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
மாசி ~ .. 18 ( 02.3.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ மாசி மாஸம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 6.30 pm வரை சதுர்த்தசி பின் பௌர்ணமி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 8 .19 am வரை ஆயில்யம் பின் மகம்
யோகம் ~ அதிகண்டம்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.31
சந்திராஷ்டமம் ~ காலை 8.18 வரை தனுசு பின் மகரம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~சதுர்த்தசி
இன்று ~மாசி மகம்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (2-3-2026) ராசி பலன்கள்
மேஷம்
வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : முடிவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : இலக்குகள் பிறக்கும்.
ரிஷபம்
எதிர்பாராத பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
மிதுனம்
இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவுகள் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
கடகம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தோற்றப்பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். மனம் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பேச்சுத் திறமையால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
பூசம் : வரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் திருப்தி ஏற்படும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு நிலை மேம்படும். மனதளவில் புதிய பக்குவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேக தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : பொறுப்புக்கள் மேம்படும்.
பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
கன்னி
வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பணி நிமித்தமாக இடமாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். எண்ணியது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : போட்டிகள் குறையும்.
அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.
சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
துலாம்
சக ஊழியர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
சித்திரை : ஆதரவான நாள்
சுவாதி : லாபகரமான நாள்
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
விருச்சிகம்
புதிய நபர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். அரசு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : தெளிவுகள் பிறக்கும்.
தனுசு
தாய் வழி உறவுகளிடம் ஒற்றுமை ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வீட்டின் தேவைகள் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு குறித்த ஆலோசனை கிடைக்கும். கடன் முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மூலம் : ஒற்றுமை பிறக்கும்.
பூராடம் : ஆலோசனை கிடைக்கும்.
உத்திராடம் : தேடல்கள் பிறக்கும்.
மகரம்
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : குழப்பமான நாள்.
அவிட்டம் : மாற்றமான நாள்.
கும்பம்
குடும்ப உறுப்பினர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இணைய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் இருந்த தாமதங்கள் குறையும். பொன் பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : விரயங்கள் ஏற்படும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : லாபம் உண்டாகும்.
மீனம்
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
ரேவதி : வாய்ப்புகள் உருவாகும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!





It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.