
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 21
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ ..8 (21.4.2025) திங்கள் கிழமை*
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 2.31 pm வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 8.33 am வரை உத்திராடம் பின் திருவோணம்
யோகம் ~ ஸாத்தம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.02
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ திதித்வயம் அஷ்டமி நவமி
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (21-4-2025) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்
வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபாரத்தின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : அனுபவம் வெளிப்படும்.
கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்
வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். துணைவர்வழி உடன்பிறப்புகளால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். மனதளவில் இருந்துவந்த வருத்தம் நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : விவேகம் வேண்டும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்
மற்றவர்களால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு பணியையும் மற்றவர்களை சார்ந்திராமல் செய்து முடிப்பது நல்லது. முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : இழுபறியான நாள்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணம் மூலம் அனுபவம் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : அனுபவம் மேம்படும்.
ஆயில்யம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்
பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் சில உதவிகள் மூலம் குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : நெருக்கடிகள் குறையும்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : ஒத்துழைப்பான நாள்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்
நண்பர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு உயரும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உடன்பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
அஸ்தம் : மதிப்பு உயரும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனம் சார்ந்த பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : தடைகள் குறையும்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : குழப்பங்கள் விலகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்
குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : வெற்றிகரமான நாள்.
கேட்டை : தயக்கங்கள் விலகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அணுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இணையம் சார்ந்த வர்த்தகத்தில் கவனம் வேண்டும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வீட்டுத் தேவைகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திராடம் : தேவைகள் நிறைவேறும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்
பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
உத்திராடம் : சோர்வான நாள்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : பயணங்கள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டி தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கோபம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
சதயம் : வரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : காரியங்கள் கைகூடும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறஇன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.
ரேவதி : புத்துணர்ச்சி பிறக்கும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!
It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.