
உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள
சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா வருகின்ற மார்ச் 23-ஆம் தேதி வேத நாராயண முறைப்படி புதிய கொடி பட்டம் கொண்டு கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் தொடங்குகிறது.
சபரிமலை சபரீசன் ஆலயத்தின் உற்சவமான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது . இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற மார்ச் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.அன்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.
23-ஆம் தேதி அதிகாலை 4மணிக்கு கோயில் நடை திறந்து கணபதி ஹோமம் நிர்மால்யதரிசனம் உற்சவ பூஜை சடங்குகள் நடத்தி காலை 9.30 மணிக்கு தந்திரி கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பதோடு துவங்கும் உற்சவமானது 01-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது .
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி ஸ்ரீ பூபதி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
மார்ச் 31-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பகவான் ஐய்யப்பன் நெற்றி பட்டம் கட்டிய யானை மீது அமர்ந்து அடியோர் புடைசூழ மேளதாளங்களுடன் சரம் குத்தி எழுந்தருளி உற்சவ பள்ளிவேட்டையானது நடைபெற உள்ளது . விழாவின் உட்ச நாளாகிய ஏப்ரல் 01-ஆம் தேதி அதிகாலை துவங்கி பல்வேறு பூஜைகளுடன் பகல் 11 மணிக்கு பம்பை நதி நோக்கி பகவான்யானையில் பயணித்து ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற உள்ளது
சபரிமலை ஆலயத்தின் கொடியேற்றி நிகழும் பெரு உற்சவமான பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பகவான் அருளினை பெற்றிட கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .



