
இன்றைய பஞ்சாங்கம் செப்.11 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆவணி ௴ 25 ௨( 11.9.2026 }
1.வருடம் பராபவ ௵ பராபவ நாம ஸம்வத்ஸரம்}
2அயனம் தக்ஷிணாயனம்
3.ருது ~ வர்ஷ ருதௌ
4.மாதம் ( ஸிம்ம மாஸம்)
5.பக்ஷம்காலை 09.22 வரை கிருஷ்ண பக்ஷம் பிறகு ஸுக்ல பக்ஷம்
6. ஸ்ரார்த்த திதி ப்ரதமை ( காலை 09.22 வரைஅமாவாசை)
7.நாள்* வெள்ளிக்கிழமை ப்ருகு வாஸரம் }
8.நக்ஷத்ரம் பிற்பகல் 02.54 வரை பூர்வ பல்குனி ( பூரம்) பிறகு உத்திர பல்குனி ( உத்திரம்) ( பிற்பகல் 02.54 வரை அமிர்த யோகம் பிறகு ஸித்த யோகம்)
நல்ல நேரம் காலை 69&1010.30 * பிற்பகல் 1* 3 மாலை 56 இரவு 81112 நாளை காலை1& 36
குளிகை காலை 7.309 AM
ராகுகாலம் காலை 10.3012 AM
எமகண்டம் பிற்பகல் 03.4.30 PM
சூரிய உதயம் ~ காலை 6 AM
சூரிய அஸ்தமனம்- காலை 06.20 PM
சந்திராஷ்டம் பிற்பகல் 02.54 வரை திருவோணம் பிறகு அவிட்டம்
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 11.9.2026
மேஷம்
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் அமையும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் தெளிவுகள் மேம்படும். அரசு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
அஸ்வினி : முடிவுகள் அமையும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
வியாபாரத்தில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கிய விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். பணிகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாசனைத் திரவிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விஷயங்கள் கைகூடும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
கிருத்திகை : தாமதங்கள் குறையும்.
ரோகிணி : பொறாமைகள் குறையும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
மிதுனம்
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தேவைகளை அறிந்து நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
கடகம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். திடீர் வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : துரிதம் உண்டாகும்.
சிம்மம்
புதிய கலைகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
கன்னி
சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். புதுவிதமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் விமர்சனக் கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : அலைச்சல் அதிகரிக்கும்.
அஸ்தம் : லாபகரமான நாள்.
சித்திரை : பொறுமை வேண்டும்.
துலாம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை குறித்து சிந்திப்பீர்கள். அரசு பணிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
விருச்சிகம்
பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்விப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தன வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : நெருக்கடிகள் குறையும்.
தனுசு
மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.
மகரம்
திட்டமிட்ட பணிகளில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
உத்திராடம் : தாமதம் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
கும்பம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : நெருக்கடிகள் மறையும்.
பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.
மீனம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். கால்நடை பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : சுறுசுறுப்பான நாள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : அமைதியான நாள்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!


