
இன்றைய பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி ~ 15 ( 29.5.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாதம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ பகல் 11.13 am வரை த்ரயோதசி பின் சதுர்தசி.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ பகல் 12.02 pm வரை ஸ்வாதி பின் விசாகம்.
யோகம் ~ பரிகம்.
கரணம் ~ தைதுளை / கரஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 5.53.
சந்திராஷ்டமம் — காலை 7.41 am வரை மீனம் பின் மேஷம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ சதுர்தசி.
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 29.5.2026
மேஷம்
உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
அஸ்வினி : தொடர்புகள் கிடைக்கும்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.
ரிஷபம்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த சில வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
மிதுனம்
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருள்களில் சற்று கவனம் வேண்டும். வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தோற்றப்பொழிவில் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னோனியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : அன்னோனியம் மேம்படும்.
கடகம்
மனதில் இருந்த குழப்பங்கள் குறையும். தனவரவுகளால் திருப்தி ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தீர ஆலோசனைகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். தனிப்பட்ட சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் வழியில் பொருள் சேர்க்கை ஏற்படும். அரசு காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : குழப்பங்கள் குறையும்.
பூசம் : முடிவுகளில் கவனம்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
சிம்மம்
சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : வாய்ப்பு கிடைக்கும்.
பூரம் : லாபம் உண்டாகும்.
உத்திரம் : தைரியம் மேம்படும்.
கன்னி
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளளவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே அன்னோனியம் பிறக்கும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3ஸ
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
உத்திரம் : பேச்சுக்களில் கவனம்.
அஸ்தம் : அன்னோனியம் பிறக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். சமுக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். தர்ம பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : சேமிப்புகள் குறையும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : கருத்துக்களில் கவனம்.
விருச்சிகம்
நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். இரவு சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
விசாகம் : தாமதம் உண்டாகும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : புரிதல்கள் மேம்படும்.
தனுசு
பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : மனப்பக்குவம் பிறக்கும்.
மகரம்
சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சமூகப் பணி செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும்.
திருவோணம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
கும்பம்
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபார நிலுவை பணிகளை செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையம் தொடர்பான துறைகளில் புதிய அறிமுகங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அனுபவங்கள் ஏற்படும்.
சதயம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : அறிமுகங்கள் உண்டாகும்.
மீனம்
சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : சிந்தனைகளில் கவனம்.
உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
ரேவதி : செலவுகள் உண்டாகும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!





à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•தà¯à®¤à®¿à®±à¯à®•௠பகà¯à®•ம௠படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•ிறதà¯. உஙà¯à®•ள௠தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•ளே சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•ளà¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.