
இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 6 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்
மாசி~ * 22 (6.3.2026) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ * மாசி மாஸம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.57 pm வரை த்ருதியை பின் சதுர்த்தி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ 10.28 am வரை ஹஸ்தம் பின் சித்திரை
யோகம் ~ கண்டம்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.30
சந்திராஷ்டமம் — கும்பம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ த்ருதியை
இன்று ~ வாஸ்து நாள் நேரம் 10.06 tp 10 .42 am
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 06.3.2026
மேஷம்
மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும் புத்துணர்ச்சி பிறக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அஸ்வினி : புத்துணர்ச்சி பிறக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரிஷபம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இடமாற்ற முயற்சி கைகூடும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரோகிணி : இன்னல்கள் விலகும்.
மிருகசீரிஷம் : முயற்சி கைகூடும்.
மிதுனம்
உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்
திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.
கடகம்
விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
புனர்பூசம் : வரவுகள் உண்டாகும்
பூசம் : வாய்ப்புகள் அமையும்.
ஆயில்யம் : முடிவுகள் கிடைக்கும்.
சிம்மம்
உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் விலகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : பொறுப்புகள் கிடைக்கும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
கன்னி
தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சாதனை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : முதலீடுகளில் கவனம்.
அஸ்தம் : புரிதல் அதிகரிக்கும்.
சித்திரை : முடிவுகள் பிறக்கும்.
துலாம்
சம வயதினர் மூலம் மாற்றமான தருணங்கள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான முதலீடுகள் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார முயற்சிகளில் சிறுசிறு மாற்றங்கள் உண்டாகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். தோற்றப்பொழிவுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். காப்பீடு பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் காணப்படும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
விசாகம் : மேன்மை ஏற்படும்.
அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
மூலம் : மதிப்புகள் கிடைக்கும்.
பூராடம் : உதவிகளை செய்வீர்கள்.
உத்திராடம் : விமர்சனங்கள் உண்டாகும்.
மகரம்
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சிந்தனை மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறி குறையும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். திருப்பணி செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : இழுபறி குறையும்.
அவிட்டம் : ஆசி கிடைக்கும்.
கும்பம்
புத்திரர்களால் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பணியாட்கள் மூலம் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். தூர தேச பயண செயல்களில் விவேகம் வேண்டும். உயர்நிலை கல்வியில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இணைய முதலீடுகளில் பொறுமை வேண்டும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அவிட்டம் : சிந்தனைகளில் கவனம்.
சதயம் : விவேகம் வேண்டும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
மீனம்
சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பணி நிமித்தமான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை பிறக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!





à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•தà¯à®¤à®¿à®±à¯à®•௠பகà¯à®•ம௠படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•ிறதà¯. உஙà¯à®•ள௠தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•ளே சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•ளà¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.