
இன்றைய பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை~ * 5
(18.4.2025) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ * சித்திரை மாஸம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 2.25 pm வரை பஞ்சமி பின் ஷஷ்டி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ மூலம்
யோகம் ~ பரிகம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை .6.6.04
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ அதிதி
இன்று
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 18.4.2025
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்
வாழ்க்கைத்துணை வழியில் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். மாமன்வழி உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்
பேச்சுக்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர்கல்வியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். சமூகம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்
ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான சில அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனை வியாபாரத்தில் புதுமையான சூழல் உண்டாகும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
திருவாதிரை : லாபம் மேம்படும்.
புனர்பூசம் : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்
எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். பொன், பொருட்கள் மீதான ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபாடு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : வாய்ப்புகள் அமையும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கல்வியில் சாதகமான சூழல் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுகளை குறைப்பது மன அமைதியை தரும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : குழப்பங்கள் விலகும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு மேம்படும்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஓய்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
சித்திரை : பாராட்டுக்கள் கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. துணைவர் வழியில் அனுசரித்து செல்லவும். தேவை அறிந்து வாக்குறுதிகளை அளிப்பது நல்லது. பயணத்தால் பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியை தரும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். தனம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : திருப்தியான நாள்.
கேட்டை : உயர்வு உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்
மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : அலைச்சல் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். ஆன்மிக செயல்களில் புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பிறமொழி மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பாசம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : அனுபவம் உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்
ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைகூடும். சிரமம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். சுகம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு உண்டாகும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : சிந்தனைகள் பிறக்கும்.

தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•தà¯à®¤à®¿à®±à¯à®•௠பகà¯à®•ம௠படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•ிறதà¯. உஙà¯à®•ள௠தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•ளே சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•ளà¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.