December 5, 2025, 12:45 AM
24.5 C
Chennai

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2025
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

கார்த்திகை~ * 19 (05.12.2025) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ * கார்த்திகை மாஸம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ ப்ரதமை
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ 1.36 pm வரை ரோகிணி பின் ம்ருகசீரிஷம்
யோகம் ~ ஸித்தம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.20
சந்திராஷ்டமம் — துலாம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ ப்ரதமை
இன்று ~ பாஞ்சராத்ர ஆலய தீபம்

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2025

இன்றைய ராசிபலன்கள் – 05.12.2025


மேஷம்

நண்பர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதர்கள் வழியில் அலைச்சல் மேம்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கலில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : மதிப்பளித்து செயல்படவும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரிஷபம்

செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : தாமதம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : ஏற்ற இறக்கம் உண்டாகும்.


மிதுனம்

பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் இருக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : பயணங்கள் மேம்படும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.


கடகம்

உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை பணிகளில் ஆதரவு கிடைக்கும். அன்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : அனுகூலம் ஏற்படும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.


சிம்மம்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மாற்றத்தை உருவாக்கும். தவறிய சில முக்கியமான பொருள்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உருவாகும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

மகம் : மாற்றம் ஏற்படும்.
பூரம் : புதுமையான நாள்.
உத்திரம் : தாமதங்கள் விலகும்.


கன்னி

கணவன் மனைவி இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சோர்வு குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

உத்திரம் : வருத்தங்கள் நீங்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : ஈடுபாடு ஏற்படும்.


துலாம்

வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
விசாகம் : கையிருப்புகள் குறையும்.


விருச்சிகம்

மன அளவில் இருந்த கவலைகள் மறையும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். அமைதி பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : கவலைகள் மறையும்.
அனுஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.
கேட்டை : தனித்திறமை வெளிப்படும்.


தனுசு

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மதிப்புகள் கூடும்.
பூராடம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
உத்திராடம் : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.


மகரம்

உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதுமையான சில விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.


கும்பம்

நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்ற சிந்தனைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். சாந்தம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : அலைச்சல் ஏற்படும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : நட்புகள் கிடைக்கும்.


மீனம்

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிலுவை சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.

பூரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2025

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

6 COMMENTS

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

Entertainment News

Popular Categories