
இன்றைய பஞ்சாங்கம் ஆக.21 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆவணி ~ 4 ( 21.8.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம்~ தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ இரவு 1.37 AM வரை நவமி பின் தசமி.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ பகல் 2.46 PM வரை அனுஷம் பின் கேட்டை.
யோகம் ~ மாஹேந்திரம்.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30 PM.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 AM.
சூரிய உதயம் ~ காலை 6.07.
சந்திராஷ்டமம் ~ மேஷம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ நவமி.
இன்று ~ வரலக்ஷ்மி விரதம்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 21.8.2026
மேஷம்
புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : சோர்வுகள் மறையும்.
கிருத்திகை : தாமதம் உண்டாகும்.
ரிஷபம்
கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
கிருத்திகை : ஒற்றுமை மேம்படும்.
ரோகிணி : திருப்தியான நாள்.
மிருகசீரிஷம் : ஆர்வம் மேம்படும்.
மிதுனம்
சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : லேசான நீல நிறம்
மிருகசீரிஷம் : நன்மை உண்டாகும்.
திருவாதிரை : இன்னல்கள் விலகும்.
புனர்பூசம் : திருப்தியான நாள்.
கடகம்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : கற்பனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : விருத்தியான நாள்.
சிம்மம்
தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பெற்றோர்களிடம் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் சில மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவருவாயில் ஏற்ற இறக்கம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : ஏற்ற இறக்கம் உண்டாகும்.
கன்னி
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிடிவாதப் போக்கைக் குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
உத்திரம் : அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
துலாம்
சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்டுச் செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மனப் பதற்றத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
விருச்சிகம்
குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தியானம் மூலம் மன அமைதியை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : அலட்சியமின்றி செயல்படவும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : அமைதி உண்டாகும்.
தனுசு
பொருளாதார நெருக்கடிகள் குறையும். கடன் பிரச்சனைகள் சில முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறுதூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : அனுகூலம் கிடைக்கும்.
உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.
மகரம்
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வரவுகளிலிருந்து இழுபறியான சூழல் மறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
கும்பம்
தந்தை வழி உறவுகள் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடை பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். கற்பித்தல் திறனில் மாற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய நினைவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : செலவுகள் உண்டாகும்.
பூரட்டாதி : நினைவுகள் மேம்படும்.
மீனம்
கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். அரசு செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!


