பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆனி ~ 26 ( 10.7.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம்~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆனி மாதம் { மிதுன மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ இரவு 2.06 AM வரை ஏகாதசி பின் த்வாதசி.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ காலை 10.07 AM வரை பரணி பின் க்ருத்திகை.
யோகம் ~ சூலம்.
கரணம் ~ பவம் / பாலவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30 PM.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 AM.
சூரிய உதயம் ~ காலை 6.00.
சந்திராஷ்டமம் ~ மாலை 3.45 PM வரை கன்னி பின் துலாம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி.
இன்று ~ ஸர்வ ஏகாதசி

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 10.7.2026


மேஷம்

உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 07 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

அஸ்வினி : வருத்தங்கள் நீங்கும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும்.


ரிஷபம்

வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீல நிறம்

கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
ரோகிணி : புரிதல் ஏற்படும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.


மிதுனம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பும் ஏற்படும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.

அதிஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.
புனர்பூசம் : கருத்துக்களில் கவனம்.


கடகம்

வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாக செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : மாற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : முடிவுகள் பிறக்கும்.


சிம்மம்

எதிலும் திருப்தி அற்ற மன நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : திறமை வெளிப்படும்.


கன்னி

புதிய தொழில் நுட்ப பொருட்களை வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.


துலாம்

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன் பொருட்களில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 06 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.
விசாகம் : சேமிப்புகள் குறையும்.


விருச்சிகம்

குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

விசாகம் : குழப்பங்கள் விலகும்.
அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.


தனுசு

கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் புதுமையான அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : முடிவுகள் பிறக்கும்.
உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.


மகரம்

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.
அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


கும்பம்

மருத்துவத் துறையில் இருப்பதற்கு மேன்மை ஏற்படும். சிற்ப பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். தாயின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வாசனை திரவிய பொருள்களால் லாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
சதயம் : அமைதி உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.


மீனம்

சிந்தனை போக்கில் தெளிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் மாற்றம் பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

ALSO READ:  பஞ்சாங்கம் - ஜூலை 08 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

6 COMMENTS

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories