பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 27.3.2026


மேஷம்

பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். பெற்றோரின் ஒத்துழைப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த குழப்பம் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.


ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் மதிப்புகள் மேம்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : தேவைகள் நிறைவேறும்.


மிதுனம்

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.
புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.


கடகம்

மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வாகன பயணங்களில் போது விவேகம் வேண்டும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : விவேகம் வேண்டும்.
பூசம் : விமர்சனங்கள் மறையும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.


சிம்மம்

எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். இலக்குகளில் மாற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் புரிதல் இன்மை ஏற்படும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : அனுபவம் கிடைக்கும்.
பூரம் : மாற்றம் ஏற்படும்.
உத்திரம் : வேறுபாடுகள் நீங்கும்.


கன்னி

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : காரியங்கள் கைகூடும்.
அஸ்தம் : தெளிவுகள் பிறக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.


துலாம்

வசதிகளை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான பொருள்களை வாங்குவதில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் மூலம் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : வேறுபாடுகள் குறையும்.
விசாகம் : தொடர்புகள் மேம்படும்.


விருச்சிகம்

ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். வங்கி பணிகளில் இருந்த தாமதம் மறையும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக ரீதியான சில பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : முடிவுகள் கிடைக்கும்.
அனுஷம் : தாமதம் மறையும்.
கேட்டை : நம்பிக்கை மேம்படும்.


தனுசு

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பணி நிமித்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். இனணயம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மூலம் : சேமிப்புகள் குறையும்.
பூராடம் : குழப்பம் ஏற்படும்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.


மகரம்

சிந்தனையில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

உத்திராடம் : குழப்பங்கள் குறையும்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும்.


கும்பம்

பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


மீனம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

6 COMMENTS

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories