இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 15 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி~ 2 (15.3.2024) வெள்ளி கிழமை.
வருடம் ~ சோபக்ருத்
{சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { *மீன மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ மறுநாள் காலை வரை ஷஷ்டி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 9.50 pm வரை க்ருத்திகை பின் ரோஹிணி
யோகம் ~ விஷ்கம்பம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.24
சந்திராஷ்டமம் ~ துலாம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 15.03.2024
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்..!
மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய வகை உணவுகள் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். கலை தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்..!
சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். மனதளவில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான தேடல் அதிகரிக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : தேடல் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்..!
உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்..!
உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : புரிதல் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்..!
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மகம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரம் : முடிவு பிறக்கும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்..!
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் புதிய தேடல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.
சித்திரை : அதிர்ஷ்டகரமான நாள்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்..!
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். நண்பர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : நெருக்கடியான நாள்.
சுவாதி : விவேகம் வேண்டும்.
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்..!
இழுபறியாக இருந்துவந்த சில விஷயங்களை தீர்ப்பதற்கான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் உயர் கல்வி தொடர்பான சிந்தனை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
விசாகம் : இழுபறி மறையும்.
அனுஷம் : சிந்தனை மேம்படும்.
கேட்டை : அறிமுகம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்..!
கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயண வாய்ப்பு சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : வாய்ப்பு சாதகமாகும்.
உத்திராடம் : புரிதல் மேம்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்..!
மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
திருவோணம் : பிரச்சனைகள் தீரும்.
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்..!
வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்..!
எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். குறுந்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ பகà¯à®•à®®à¯ படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. உஙà¯à®•à®³à¯ தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•à®³à¯‡ சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•à®³à¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.