
இன்றைய பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 25 ( 08.5.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ காலை 9.42 am ஷஷ்டி வரை ஸப்தமி.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ மாலை 6.38 pm வரை உத்தராடம் பின் திருஓணம்.
யோகம் ~ சுபம்.
கரணம் ~ வணிஜை / பத்திரை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 5.56
சந்திராஷ்டமம் — மிதுனம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ ஸப்தமி.
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 08.5.2026
மேஷம்
மனதளவில் உத்வேகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். மறைமுக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
செயல்பாடுகளில் தன்னம்பிக்கையும் அனுபவமும் வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பயணம் முலம் புதிய அனுபவம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விமர்சனங்கள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். அரசு வழியில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் நீங்கும்.
மிதுனம்
முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத கற்பனைகளால் சோர்வுகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
திருவாதிரை : பிரச்சனைகள் நீங்கும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
கடகம்
உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
சிம்மம்
எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : தெளிவுகள் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வழக்கு பணிகளில் இருந்து வந்த காலதாமதங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.
சித்திரை : தாமதங்கள் குறையும்.
துலாம்
உறவினர்கள் வழியில் ஆதரவான சூழல் உருவாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். வீட்டினை மனத்திற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : நெருக்கடிகள் குறையும்.
விசாகம் : எதிர்ப்புகள் குறையும்.
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோகப் பணியில் திருப்தியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
விசாகம் : தடைகள் குறையும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : திருப்தியான நாள்.
தனுசு
உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
சிந்தனைகளில் மாற்றங்கள் உருவாகும். உடலின் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நினைவாற்றலில் ஒரு விதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : மாற்றங்கள் உருவாகும்.
திருவோணம் : மந்தமான நாள்.
அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.
கும்பம்
பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வருமானம் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
மீனம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவு செய்வீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் பற்று வரவு மேம்படும். உழைப்புக்குண்டான மதிப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : அன்பு மேம்படும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரேவதி : மதிப்புகள் கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!





à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•தà¯à®¤à®¿à®±à¯à®•௠பகà¯à®•ம௠படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•ிறதà¯. உஙà¯à®•ள௠தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•ளே சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•ளà¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.