T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
அரையிறுதி ஆட்டங்கள் 05.03.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          முதல் அரையிறுதி ஆட்டம் 04.03.2026 அன்று கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறினார்கள். முதலிரண்டு விக்கட்டுகள் இரண்டாவது ஓவரில் விழுந்தன.

தொடக்க மட்டையாளர்கள் எய்டன் மர்க்ரம் (20 பந்துகளில் 18 ரன்), க்விண்டன் டி காக் (8 பந்துகளில் 10 ரன்), ரியன் ரிக்கிள்டன் (பூஜ்யம் ரன்), டேவிட் மில்லர் (6 பந்துகளில் 6 ரன்) என நிலைத்து ஆட்டமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டிவால்ட் ப்ருவிஸ் (27 பந்துகளில் 34 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (24 பந்துகளில் 29 ரன்) மற்றும் மார்கோ யான்சன் (30 பந்துகளில் 55 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் டிம் செய்ஃபர்ட் (33 பந்துகளில் 58 ரன்), ஃபின் ஆலன் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ரவின் ரச்சீந்திரா (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 12.5 ஓவர்களில் 173 ரன் எடுத்து நியூசிமாந்து அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இந்தியா அபார வெற்றி

          மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (9 ரன்) இந்த ஆட்டத்திலும் குறைந்த ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் மூன்றாவது ஓவரில் ஒரு கேட்ச் கொடுத்து அவுட் ஆக இருந்தார்.

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ப்ரூக் அந்த சுலபமான கேட்சை பிடிக்கத் தவறினார். அவர் 14ஆவது ஓவர் வரை விளையாடி 42 பந்துகளில் 89 ரன் அடித்தார். அதில் 8 ஃபோர்கள் 7 சிக்சர்கள். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினர். இஷான் கிஷன் (18 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), ஷிவம் துபே (25 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) (இவர் சற்று முன்னதாக மட்டையாட அனுப்பப்பட்டார்), ஹார்திக் பாண்ட்யா (12 பந்துகளில் 27 ரன்), திலக் வர்மா (7 பந்துகளில் 21 ரன்)என அனைவருமே அதிரடியாக ஆடினர். சரியாக விளையாடாதவர், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (6 பந்தில் 11 ரன்) தான். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 253 ரன் எடுத்தது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

          இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணி பில் சால்ட் (5 ரன்), ஜாஸ் பட்லர் (25 ரன்) மற்றும் ஹாரி ப்ரூக் (7 ரன்) ஆகியோரை பவர் பிளே ஓவர்களுக்குள் இழந்து 64 ரன் மட்டுமே எடுத்தது. ஜேகப் பெதல் (48 பந்துகளில் 105 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) சிறப்பாக ஆடினார். 15 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, இரண்டு விக்கட்டுகளையும் எடுத்து, ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 146 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 64 ரன் கொடுத்தார். இது ஒரு மோசமான சாதனையாகும். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்.

          இறுதி ஆட்டம் இந்தியம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 0700 மணிக்கு நடைபெறும்.      

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories