சாராயம் ஒரு போதை வஸ்து அல்ல என்றே நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார் பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் சுர்ஜித் குமார் ஜ்யானி.
சாரயத்தை ஒரு போதை வஸ்துவாகக் கருதவில்லை, ஆல்கஹாலை போதைப்பொருள் என்று கூறமுடியாது, இதை ராணுவத்தினரும், பார்ட்டிகளிலும் கொண்டாட்டடங்களிலும் உட்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார் அவர்.
சாராயம் தயாரிப்பதற்கு அரசு தயாரிப்பாளருக்கான உரிமத்தை வழங்குகிறது. நாம் ஏலத்தை நடத்துகிறோம். இவ்வாறு பார்க்கும்போது, சாராயத்தை போதைப்பொருள் கூறக்கூடாது என்று ஜ்யானி செய்தியாளர்களிடம் கூறினார். பாதல் தொகுதியில், போதையால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியிருந்தார்.
பஞ்சாப், மதுவுக்கு அடிமையான மாநிலமாக பெரும் பிரச்னைகளைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.