கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

kamalalayam tn bjp - 2026

முரளி சீதாராமன்

1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- “ஏப்ரல் 4 அன்று பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள்!”

2) அதே பாலிமர் டிவியில் கீழே ஸ்க்ரோல்:-
“ஏப்ரல் 3 பாண்டிச்சேரி பிரசாரத்துக்கு வரும் மோடி – சென்னையில் பாஜக பொறுப்பாளர்களை சந்தித்து – வேட்பாளர்கள், தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்யப் போகிறார்.

3) அனைவரும் எதிர்பார்த்தபடி மத்திய பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை.

4) கோவையில் இருந்து அண்ணாமலை பாண்டிச்சேரி சென்று அங்கே ரோட் ஷோ – மற்றும் ராஜ்பவன் தொகுதியில் பிரசாரம்.

5) பிரசாரத்தின் இடையில் சென்னை வரச் சொல்லி அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் அழைப்பு. அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை வருகை.

6) கமலாலயத்தில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுடன் பியூஷ் கோயல் கலந்தாலோசனை.

7) சில நாள்களில் பாஜக பட்டியல் வெளியாகும் – என்று பியூஷ் கோயல் அறிவிப்பு.

JUST I AM CONNECTING THE DOTS. நல்ல முடிவு வரும் என்று நம்புவோமாக.

1984 ல் இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 414 இடங்களைப் பிடித்தது. பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. பல பாஜக அபிமானிகள் காங்கிரஸ் மாதிரி பாஜக என்று வளரும் என்று ஏங்கினார்கள்.

பாஜக வளர்ந்தது – மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் மாதிரி மத்திய அதிகாரத்திலும் – பாரதம் முழுக்கப் பரவலாக ஆட்சி அதிகாரத்திலும் பாஜக வளரவேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுப் பிரார்த்தித்து இருக்க வேண்டும்! ஆனால் கடவுளிடம் மொட்டையாகக் காங்கிரஸ் மாதிரி பாஜக வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததன் பலன்…

இப்போது பாருங்கள்… கட்சிக்குள் உள் விளையாட்டு, தொகுதிப் பங்கீட்டில் சொதப்பல், வேட்பாளர் தேர்வில் இழுபறி… இப்படிப் பலவற்றிலும் காங்கிரஸ் மாதிரியே வளர்ந்து தொலைத்து இருக்கிறது!

சத்திய மூர்த்தி பவனுக்கும் கமலாலயத்துக்கும் என்ன வித்தியாசம்?

வேட்பாளர் தேர்வில் இழுபறி… ஒருவர் கட்சி போட்டியிட ஏதுவாக ஆண்டுக் கணக்கில் உழைத்து களத்தை தயார் செய்திருப்பார் – அவர் மீது உள்ள அசூயையில் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்த்து விடுவது…

மேலிடப் பார்வையாளரிடம் தங்கள் பார்வையில் என்ன படுகிறதோ அதையே கட்சியின் அடிமட்ட RANK AND FILE பார்வைபோல BRIEFING செய்வது… தனக்கு வேண்டாதவரைப் போட்டுக் கொடுப்பது, அல்லது அவருக்கு வாய்ப்பான தொகுதியை ஃப்யூஸ் பிடுங்கி விடுவது…

இப்படி பல விஷயங்களில் சத்திய மூர்த்தி பவனும் – கமலாலயமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்றே ஒரு அரசியல் பார்வையாளனாகக் கருத வேண்டியுள்ளது. என்ன சத்தியமூர்த்தி பவன் என்றால் சேர்கள் பறப்பு, சட்டை கிழிப்பு, வேட்டி பறிப்பு என்றெல்லாம் நடக்கும் என்பார்கள்.

திமுக 1989 ல் காங்கிரஸ் பற்றி போஸ்டரே ஒட்டியது:- “ஊருக்கு ஊரு இருபது கோஷ்டி – ஊழியர் கூட்டத்தில் கிழியுது வேஷ்டி!”

கமலாலயத்தில் மரியாதையாக ஒருவரை ஒருவர் ஜி ஜி என்றழைத்து கும்பிட்டுக் கொள்வார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories