IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ipl 2026 season - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இதில், மார்ச்சு 28 முதல் மே 31ஆம் தேதி வரை மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சென்ற வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வருடம் 10 அணிகள் போட்டியில் கலந்துகொள்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்க்ஸ் ஆகிய அணிகள் குரூப் A பிரிவில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய ணிகள் குரூப் B பிரிவிலும் உள்ளன.

குழுப் போட்டி வடிவமானது, 2023 IPL தொடரில் பின்பற்றப்பட்டதைப் போன்றே அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்றொரு குழுவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும் மோதும்.

குழு நிலைப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ள முதல் நான்கு அணிகள் ‘பிளே-ஆஃப்’ (Playoffs) சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Qualifier 1” என அழைக்கப்படும்); அதேபோல, எஞ்சிய இரண்டு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Eliminator” என அழைக்கப்படும்). Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

அதேவேளையில், அப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்—அவ்வணியானது Eliminator போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோத வேண்டும் (இப்போட்டி “Qualifier 2” என அழைக்கப்படும்).

இந்த Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அணிகள் வென்றுள்ள கோப்பைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (seeded) வகைப்படுத்தப்பட்டன.

முதல் ஆட்டம் பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே மார்ச்சு 28ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 9 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன் எடுத்தார்.

இதில் 8 ஃபோர்கள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்தார். அனிகேத் வர்மா 18 பந்துகளில் 43 ரன் (3 ஃபோர் மற்றும் 4 சிக்சர்கள்) எடுத்தார். ஹென்றி கிளாசன் 22 பந்துகளில் 31 ரன் (2 ஃபோர் மற்றும் 1 சிக்சர்) எடுத்தார். பெங்களூரு அணியில் டஃப்ஃபி, ஷெப்பர்ட் தலா மூன்று விக்கட்டுகள், புவனேஷ் குமார், அபிநந்தன் சிங், சுயேஷ் ஷர்மா தலா ஒரு விக்கட் எடுத்தனர்.

ஆனால் இந்த ஸ்கோரை பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 69 ரன் (5 ஃபோர், 5 சிக்சர்), தேவதத் படிக்கல் 61 ரன் (7 ஃபோர், 4 சிக்சர்), ரஜத் படிதார் 31 ரன் (2 ஃபோர், 3 சிக்சர்) அடித்தனர். ஆட்டநாயகனாக ஜேகப் டஃப்ஃபி அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டம் மும்பையில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மார்ச்சு 29ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 220 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் அஜிங்க்யா ரஹானே 67 ரன்( 3 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஃபின் ஆலன் 37 ரன்(6 ஃபோர், 2 சிக்சர்) அபாரமான தொடக்கம் தந்தனர்.

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 51 ரன்( 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ரிங்கு சிங் 33 ரன் (4 ஃபோர்) அருமையாக விளையாடினர். பின்னர் ஆடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 224 ரன் எடுத்து அபார் வெற்றி பெற்றது. ரியன் ரிக்கிள்டன் 81 ரன் (4 ஃபோர், 8 சிக்சர்), ரோஹித் ஷர்மா 78 ரன் (6 ஃபோர், 6 சிக்சர்) அடித்தனர். இவரிகளின் ஆட்டம் மும்பையின் வெற்றியை உறுதி செய்தது.

மூன்றாவது ஆட்டம் மார்ச்சு 30ஆம் தேதி கௌஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன் எடுத்தது. இஅந்த அணியில் ஜேமி ஓவர்டன் மட்டும் சிறப்பாக ஆடி 43 ரன் சேர்த்தார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், பர்ஜர், ஜதேஜா ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 128 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவம்ஷி 17 பந்துகளில் 52 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். சென்ற ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தைப் பெற்ற சென்னை அணி இந்த முறை தொடக்க ஆட்டத்திலேயே சொதப்பியது ரசிகர்களை ஏமாற்றியது.

நான்காவது ஆட்டம்மார்ச்சு 31ஆம் தேதி சண்டிகரில் குஜராத் அணிக்கும் பஞ்சாப் அனிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கூப்பர் கன்னோலி 72 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.        

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories