
மதுரை சிம்மக்கல், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை, சோழவந்தான், திருநெல்வேலி பள்ளிகள் சார்பில் 186 ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் ஓரங்க நாடகம், குழுச் சிந்தனை, அது தொடர்பான அமர்வு, தியானப் பயிற்சி ஆகியவை நடைபெற்றன.
தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், சுவாமி விமூர்த்தானந்தர் ‘உயிரோட்டம் உள்ள ஆசிரியர்களாக விளங்கி, மாணவர்களுக்கு உயிரூட்ட வாருங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பிற்பகலில் இளம் ஆசிரியர்கள் மூத்த ஆசிரியர்களின் சிறப்பு குணங்கள் மற்றும் அவர்களிடம் கற்றவை குறித்தும் பாராட்டிப் பேசினார்கள். மொத்தத்தில் அனைத்து ஆசிரியர்களும் ஆனந்தமும் ஆற்றலும் பெற்று விரைவில் ஒரு நல்ல சமுதாயத்தை நோக்கிப் புறப்பட்டனர்.





