
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி இயங்க இருக்கும் வாராந்திர ரயிலின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
வரும் மார்ச் 18 புதன்கிழமை முதல் எர்ணாகுளம் வேளாங்கண்ணி சேவை துவங்குகிறது
மார்ச் 19 வியாழன் முதல் வேளாங்கண்ணி எர்ணாகுளம் சேவை துவங்குகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது .
இந்த விரைவு ரயில் கோட்டயம் கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக ஏற்கனவே சிறப்பு ரயில் இயங்கிய வழித்தடத்தில் இயங்கும்.
இதற்கான புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டது.முன்பதிவு நாளை முதல் துவங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கொல்லம் ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி வழியாக வாரத்தில் இரண்டு நாள் இயங்கும் விரைவு ரயிலே மூன்றாவது நாள் சேவையாக மதுரை தஞ்சாவூர் வழியாக இயங்க இருக்கிறது அதே புதிய எர்ணாகுளம்-வேளாங்கன்னி பெட்டிகளை பயன்படுத்தி அதே கோச் வடிவிலேயே இயங்கும் . தென்காசி ராஜபாளையம் பகுதி மக்கள் பகல் நேரத்தில் மதுரை திருச்சி தஞ்சாவூர் செல்லலாம்.




