பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

Published:

1001314347 - 2026

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை நாளை சனிக்கிழமை 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மார்ச்15முதல்19வரை ஐந்து நாட்கள் பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் வரும் 15ம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு முந்தைய நாளான சனிக்கிழமை 14ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறப்பார். சன்னிதானத்தில் தீபம் ஏற்றி ஐயப்பனின் தவ அலங்காரத்தை கலைந்து பக்தர்களுக்கு பஸ்தபிரசாதம் வழங்குவார் தொடர்ந்து 18 படி கீழிறங்கி தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வருவார் அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மறுநாள் (15ம் தேதி) முதல் 19ம் தேதி வரை தினமும் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தாமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும். தரிசனத்திற்கும், சன்னிதானத்தில் தங்குவதற்கான அறைகளுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பங்குனி மாத பூஜையில் பக்தர்கள் பங்கெடுக்க ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சபரிமலைக்கு செல்லலாம் அல்லது பம்பை நிலக்கடலில் உடனடி முன்பதிவு மூலம் முன்பதிவு செய்து சபரிமலை செல்லலாம் .

தற்போது கேரளாவில் பலத்த வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் பாம்பை நதியில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது சபரிமலை பம்பை எரிமேலி உட்பட பல்வேறு பகுதிகளில் 42 டிகிரி செல்சியதற்கும் மேல் வெயில் வாட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img