ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

Published:

1781972 congress1 - 2026

இன்று ஈரான் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தார்மீக நிலைப்பாடு அவர்களுடைய முந்தைய நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது குழப்பம் அளிப்பதாக இருக்கிறது. (சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் நடந்த) ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

இது அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றும், இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடக்கும் நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு செய்யப்பட்டது என்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடை என்ற அழுத்தத்திற்கு பயந்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டது.

அப்போது ஈரான், பாகிஸ்தான், இந்தியாவை இணைத்து எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இவையெல்லாம் அத்தியாவசியமான மூலோபாயங்கள் என்று சொல்லப்பட்டது. அதே கட்சி இப்போது மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளை கோழைத்தனமானது என்று விமர்சிப்பது சாரமற்றது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

வசுதைவ குடும்பம் என்ற சொல்லாடலை மேற்கோள் காட்டி தார்மீக பொறுப்பை துறந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகிறார்.

ஆனால் அதே தார்மீக துடிப்பை அவர் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட போது காட்டாதது ஏன்?

காஷ்மீரில் 1980ல் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்த போதும் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருந்தது ஏன்?

  • பல்பீர் பூஞ்ச் – எழுதிய கட்டுரையில் இருந்து

Related articles

Recent articles

spot_img