தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

kamalalayam tn bjp - 2026
  • பி.ஆர். மகாதேவன்

அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே ஏழு லட்சம்
அதிமுக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 41 லட்சம்
அதிமுக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 76 லட்சம்
அதிமுக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 53 லட்சம்
அதிமுக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே நான்கு லட்சம்

அதாவது 2006-ல் ஜெயலலிதா தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகளைவிட 2021-ல் எடப்பாடி தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகள் 46 லட்சம் அதிகம்.

2026-ல் தோற்றபோது அதிமுக வாங்கியிருக்கும் வாக்குகள் 2006-ல் வாங்கிய வாக்குகளைவிட வெறும் முன்று லட்சம் மட்டுமே குறைவு.

நிச்சயம் ஜெயலலிதாபோல் எடப்பாடியார் பெரிய ஆளுமை இல்லைதான். ஆனால் வாக்களித்திருக்கும் அதிமுகவினரும் பொது மக்களும் எடப்பாடியை இன்றுவரையிலும் கைவிடவில்லை.

மக்களாட்சியில் ஒரு தலைவருடைய மதிப்பு என்பது அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பாஜக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஆறு லட்சம்
பாஜக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் எட்டு லட்சம்
பாஜக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் பதிநான்கு லட்சம்

பாஜக 2009-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 7 லட்சம்
பாஜக 2014-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 22 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 15 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 48 லட்சம்

போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையிலான பாஜகவின் வாக்கு சதவிகிதம்.
2014 – 9 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 24.1%
2019 – 5 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 28.5%
2024 – 23 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 20%

மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை… அதில் ஒரு கட்சி எத்தனை வாக்குகளைப் பெறுகிறது என்ற அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிடுவது ஒரு கட்சியின் உண்மையான வளர்ச்சியைக் காட்டாது.

எத்தனை இடங்களில் போட்டியிட்டிருக்கிறது. அங்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில் ஒரு கட்சி எத்தனை சதவிகிதம் பெற்றிருக்கிறது என்றுதான் கணக்கிடவேண்டும்.

ஒரு கட்சி போட்டியிடாத தொகுதிகளில் விழுந்த வாக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்ப்பதென்பது சரியல்ல. ஏனென்றால் போட்டியிடாத பகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஒரு வாக்கும் கிடைத்திருக்காதே.

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டால் ஒரு கட்சியின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். அதைவைத்து கட்சி வளர்ந்துவிட்டதாகச் சொல்லவே முடியாது.

தமிழகத்தில் பாஜக கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் நிறைய இடங்களில் போட்டியிட்டிருக்கின்றன. ஆனால் ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவரைத் தாண்டி மக்கள் பாஜக பக்கம் வரவே இல்லை. இது அத்வானி, வாஜ்பாய் ஆகியோரின் தோல்வி அல்ல. தமிழக மக்கள் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் அந்நாட்களில் இந்து நேச சக்தியாகப் பார்த்தனர். அவர்களை மீறி கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதெல்லாம் மிகவும் கடினமான விஷயம்.

அதோடு அப்போது நரேந்திர மோதி தலைமையிலான மத்திய ஆட்சியும் அமைந்திருக்கவில்லை. எனவே 2014க்கு முந்தைய பாஜகவின் செயல்பாடுகளை இந்தப் பின்னணியில்தான் மதிப்பிடவேண்டும்.

2014க்குப் பிறகும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் பெரிய ஆதரவு அலை ஒன்றும் வீசிவிடவில்லை. படிப்படியான வளர்ச்சி என்று கூட சொல்ல முடியாது. ஒருவித தேக்க நிலையே நிலவுகிறது. வாஜ்பாய் காலத்தைவிட மோதியின் காலத்தில் ஒப்பீட்டளவில் இந்து சக்திகள் ஓரளவுக்கு பலம் பெற்றிருக்கின்றன. இது ஒருபோதும் போதாது.

இந்தக் காலகட்டத்திலும் மக்கள் அதிமுகவிடமிருந்து பாஜக பக்கம் நகர்ந்திருக்கவே இல்லை.

2026 தேர்தலிலும் அதிமுக ஒரு கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அவை முழுவதும் பாஜகவின் வாக்குகள்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் பாஜகவுக்கு வளர்ச்சி கிடைக்கவில்லை. தனியாக நின்றாலும் வளர்ச்சி கிடைக்கவில்லை.

எனவே அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்று வியூகம் வகுக்காமல் இந்துக்களை அணி திரட்டுவது எப்படி என்று வியூகம் வகுக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், அதிமுக பற்றிய சிந்தனையே பாஜகவுக்குத் தேவையே இல்லை. ஆனால், அதிமுகவுக்கு வாக்களிக்கும் இந்துக்களைப் பற்றி பாஜக சிந்தித்தே தீரவேண்டும். ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவர் இருந்தபோது பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பதில் ஆச்சரியப்படவோ வருத்தப்படவோ எதுவும் இல்லை. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின்னரும் அந்த இந்துக்களின் நம்பிக்கையை பாஜகவால் ஏன் இன்னும் பெற முடியவில்லை?

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஊடகங்களின் துறையுடன் உருவாக்கி வைத்திருக்கும் மாயத் தோற்றம் உடைக்கப்படவேண்டும். உண்மையில் அது 2009 வாக்கிலேயே ஆரம்பித்துவிட்டது. நாம் தமிழர் என்றும் தமிழ் தேசியம் என்று 2009 வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்து-இந்திய வெறுப்பு பிரசாரத்தின் இரண்டாம் சுனாமிதான் 2016-2021 காலகட்டத்திலான திமுகவின் பேயாட்டம். உண்மையில் சைமனிஸமே ஸ்டாலினிஸத்தின் முன்னோடி மற்றும் வழிகாட்டி.

பஞ்ச பரிவர்த்தன் என்ற பெயரில் பிளாஸ்டிக் பை உபயோகிக்கூடாது, தினமும் பல் தேய்க்க வேண்டும், சோப் போட்டுக் குளிக்கவேண்டும், அப்பா அம்மாவிடம் அன்பாக நடந்துகொள்ளவேண்டும், டிராஃபிக் கான்ஸ்டபிளை மதிக்கவேண்டும் என்றெல்லாம் நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். பேரியக்கம் நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் பின்பற்ற வேண்டிய பஞ்ச சீலங்கள் :

  1. அண்ணாமலையை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக்கவேண்டும். தமிழக ஊடகங்களை நடுநிலையாக நடந்துகொள்ளச் செய்யவேண்டும். அதாவது சர்ச்-திமுக-இடதுசாரிப் பிடியில் இருக்கும் தமிழக ஊடக மாஃபியாவை அடக்கவேண்டும். அவர் மத்திய அரசு அல்லது மத்திய அரசியல் பதவிக்குச் செல்ல விரும்பாவிட்டால் தமிழகக் கிளைக்கென்று தனியாக ஒரு பதவியை ஆரம்பித்து அதன் தலைவராக அண்ணாமலையை நியமிக்கலாம். சிங்கத்துக்கு வேட்டைக் களம் அமைத்துத் தரவேண்டும். சர்க்கஸ் கூண்டு அல்ல.
  2. மத்திய வருமான வரி – லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையின் தமிழக கிளை ஒன்றை புதிதாக ஆரம்பித்து சுப்ரமணியம் ஸ்வாமியை அதன் தலைவராக நியமிக்கவேண்டும். குற்றம் செய்து தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் ஆ.ராசா, ஸ்டாலின், கனிமொழி, மாறன், சிதம்பரம், செந்தில் பாலாஜி, பொன்முடி, கி.வீரமணி என வரிசையாக கைது செய்யப்படவேண்டும்.
  3. இந்து அற நிலையத்துறையில் மட்டுமல்லாமல் தலித் பெயரில் இட ஒதுக்கீடு பெற்று பதவியில் இருக்கும் அத்தனை க்ரிப்டோக்களையும் பதவி நீக்கம் மற்றும் உரிய சட்டபூர்வமான அபராதம்+சிறை தண்டனை வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தையும் இட ஒதுக்கீட்டையும் மதிக்கும் அரசு முதலில் செய்ய வேண்டியது, அரசியல் சாசன மீறலையும் இட ஒதுக்கீட்டு ஏய்ப்பையும் தடுப்பதுதான். அம்பேத்கரை மதிப்பதென்றால் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை மதிக்கவும். இதற்கென்றே ஒரு துறை உருவாக்கி அதற்கு ஹெச்.ராஜாவைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  4. வகஃப் சொத்து முறைகேடுகளை புதிய சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து கடந்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரித்திருக்கும் வக்ஃப் சொத்துகளை மீட்டு உரிய நபர்களுக்குத் தரவேண்டும். இந்தத் துறைக்கு தமிழத்தின் சார்பில் வேலூர் இப்ராஹிமைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  5. திரைப்படத்துறையில் புழங்கும் கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, கஞ்சா பண முதலீடு, விநியோக ஏக ஆதிக்கம், பாலியல் வன்கொடுமைகள், இந்து துவேஷச் சித்திரிப்புகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் தடுக்கவும் கடும் தண்டனைகள் உடனே வழங்கவும் ஒரு வாரியம் புதிதாக அமைக்கவேண்டும். தமிழிசை-வானதி-குஷ்பு ஆகியோர் தலைமையில் முழு அதிகாரம் கொண்ட ஒரு சக்தி கேந்திரமாக அதைச் செயல்பட அனுமதிக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் தமிழகம் தனி நாடு என்றுதானே இந்திய விரோத இந்து விரோத சக்திகள் செயல்படுகின்றன. எனவே தமிழகத்துக்கென்றே தனியான துறைகளை அவர்கள் கேட்பதுபோல் அமைத்து தமிழகத்தை வளம் பெறச் செய்யவேண்டும்.

எந்தப் பதவிக்கு யார் என்பதெல்லாம் ஒரு புரிதலுக்காகச் சொல்லப்பட்டிருப்பவையே. ஒவ்வொரு நபரின் அணுகுமுறை, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் அவை சொல்லப்பட்டிருக்கின்றன.

அடிப்படை விஷயம் என்னவென்றால் attitude… அதுவே முக்கியம்.
ஆள் அல்ல; ஆளுமை அதுவே பிரதானம்.
சொல் அல்ல; செயலே பிரதானம்.
ஆட்சி அல்ல; அதிகாரப் பிரயோகமே பிரதானம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Topics

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

Entertainment News

Popular Categories