தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

election commisioner annouced date of election - 2026

தமிழகத்தில்
வாக்குப்பதிவு: 23/04/2026
வாக்கு எண்ணிக்கை: 04/05/2026

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவித்தது.

தில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸாம் ஆகிய மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் வெளியிட்டனர். இதனுடன், சில மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதை அடுத்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது. 

மேற்கு வங்கம் தவிர, தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி,

தமிழக தேர்தல் விவரம்

மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30
மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06
மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை : மே 04

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில்:

மனு தாக்கல் தொடங்கும் நாள்: மார்ச் 16
மனுத்தாக்கல் கடைசி நாள் : மார்ச் 23
மனுக்கள் பரிசீலனை : மார்ச் 24
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: மார்ச் 26
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை : மே 04

மேற்கு வங்கத்தில்…

மேற்கு வங்கம் – 2 கட்டம்
மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30 | ஏப்ரல் 02
மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06 | ஏப்ரல் 09
மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07 | ஏப்ரல் 10
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09 | ஏப்ரல் 13
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23 | ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை : மே 04

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்

*“தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

*பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.

*தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.

*அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.

*கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories