பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

corruption charges in palamedu municipal office - 2026

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

மதுரை பாலமேடு பேரூராட்சியில் 3.50 லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வாரச்சந்தை ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல், காவல்துறையினரை வைத்து தடுத்து மிரட்டுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது ஒப்பந்ததாரர் குற்றச்சாட்டுகள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை, மாவட்டம், பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான ஏலம் பாலமேட்டை சேர்ந்த குணசேகரன் (47) என்பவர் 21 லட்சத்து 66 ஆயிரத்து 35 ரூபாய்க்கு ஏலம் எடுத்ததுடன், கடையை கடந்த 11 மாதமாக நடத்தி வந்துள்ளார்.

மேலும் வாரச்சந்தை நடைபெறும் கடைகளை சாலையில் போட எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்ததாரர் குணசேகரன் சாலையில் வாரச்சந்தை கடை போட அனுமதிக்க வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

ஆனால் , பேரூராட்சி நிர்வாகமோ . அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர இயலாது என்றும், சந்தைக்கு மறு ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது இதனைத் தொடர்ந்து வாரச்சந்தை. ஏலம் எடுப்பதற்கு பலர் பாலமேடு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில் திடீரென பழைய ஒப்பந்த தாரர் குணசேகரன் ஏற்கனவே 21 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டதால் தனக்கே மறுபடியும் வாரச்சந்தையை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் என்னிடம் லஞ்சப்பணமாக வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணை தலைவர் என மூவரும் சேர்ந்து ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விட்டு பொது ஏலத்தை நடத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவரை அலுவலக ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் வெளியே போகச் சொல்லி போலீசாரை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த குணசேகரன் தன்னிடம் பெற்ற 3.50 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி தர வேண்டும் இல்லையென்றால் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டேன் என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

இதனால், பேரூராட்சியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் தன்னை காவல்துறையின் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதனால் ஏலக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செயல் அலுவலருக்கு 50 ஆயிரம், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் என மொத்தம் 3.50 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும் ஒப்பந்ததாரர் குணசேகரன் கூறிய நிலையில், இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை செய்து பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் லஞ்சப்பனம் பெற்றது உண்மையாக உண்மையாகும் பட்சத்தில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இதுபோல், பேரூராட்சியில் நடைபெறும் மற்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என பாலமேடு பேரூராட்சிக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories