5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

Published:

election voting - 2026

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய ஐந்து மாநில சட்ட மன்றங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதை அடுத்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது. 

இந்நிலையில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது  இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.

தில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸாம் ஆகிய மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று வெளியிடுகின்றனர்.  இதனுடன், சில மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது 

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் மேற்கு வங்கத்தில் ஐந்து முதல் ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது 

Related articles

Recent articles

spot_img