ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

a v rangachary swami chidambaram - 2026


சிதம்பரம்: பிரபல ஸ்ரீவைணவப் பேரறிஞரும். ஆன்மீகச் சொற்பொழிவாளரும், சிறந்த கல்வியாளருமான உபய வேதாந்த முனைவர் ஏ.வி. ரங்காச்சாரி ஸ்வாமி (ஏவிஆர் ஸ்வாமி) ஜூலை 2, வியாழன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

ஸ்ரீ வைஷ்ணவ உலகத்தினராலும், ஆன்மீக அன்பர்களாலும் “நடமாடும் ராமானுஜர்” என்று போற்றப்பட்ட அவரது மறைவு, ஆன்மீக மற்றும் கல்வி உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. சிதம்பரம் தில்லைத் திருச்சித்திரகூடத்துடன் எண்பது ஆண்டு பந்தம். சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை பகவத் பாகவத கைங்கரியத்திற்காகவே அர்ப்பணித்தவர் . சிதம்பரத்தின் சைவர்களும் வைணவர்களும் ஒருசேர மதித்துப் போற்றிய மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

இளம் வயது அறங்காவலர்

தமது 13வது வயதிலேயே நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களைக் கற்று, ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். சிதம்பரம் திவ்யதேசத்தின் உத்ஸவங்களைச் செம்மையாக நடத்துவதில் சிறு வயது முதலே பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இதன் காரணமாக, தனது 18வது வயதிலேயே அறங்காவலர் குழுவில் இணைந்து, மிக இளம் வயதில் இப்பொறுப்பை ஏற்ற பெருமைக்குரியவர் ஆனார். பின்னர் இக்கோவிலின் முதன்மை நிர்வாக அறங்காவலராக (Managing Trustee) சிறப்பாகப் பணியாற்றினார்.

இவர் ஆன்மீகத்துடன், அறங்காவலராகவும் பணியாற்றியது மட்டுமின்றி, கல்வித்துறையிலும் முத்திரை பதித்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பொருளாதாரத் துறையின் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

பாரம்பரிய ஆன்மீகக் கருத்துகளைத் தற்கால கல்வித் தத்துவத்தோடு இணைத்து வழங்குவதில் வல்லவரான அவர், Managerial Ability of Sri Ramanuja in Retrospection, Ramanuja: A Reality, Not a Myth உள்ளிட்ட பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ராமாயண உபந்நியாசங்களும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களை நல்வழிப்படுத்தின. பாரம்பரியக் கல்வி மற்றும் வைணவ நெறிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காகப் புகழ்பெற்ற “ஸ்ரீ ராமானுஜ சேவா ஸ்ரீ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories