வேளச்சேரி – பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

bringimalai to velachery train stared - 2026

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும்ரயில், 80 நிமிடப் பயணம் இனி 15 நிமிடங்களில்!

வேளச்சேரி – பிருங்கிமலை (பரங்கிமலை) பறக்கும் ரயில் : இருபது வருட கனவு நிறைவேறியது பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இந்தத் திட்டத்தை சாத்தியமாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

சென்னைவாசிகளின் 18 வருட கனவான வேளச்சேரி – பிருங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் இணைப்பு மார்ச் 14ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் MRTS எனும் பறக்கும் ரயில் ஒரு வரப்பிரசாதம். ₹5க்கு அடுத்த ஸ்டேஷன் பஸ் கட்டணம் கூட இல்லாமல் போனபின்பு அதை தருகிறது. மந்தைவெளி – பரங்கிமலை ரிட்டர்ன் டிக்கெட் ₹10. அதனால் மட்டுமல்ல, அதன் மூலம் சேமிக்கும் நேரம் என்பது அதீதமானது. பரங்கிமலை – மந்தைவெளி ஒரு 35 நிமிட நேர பயணம். அதுவும் பரங்கிமலையிலிருந்து வேளச்சேரி மெதுவாக வருவதால் ஒரு 5 நிமிடம் கூடுதல் நேரம். வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஸ்டேஷன் நிற்பதில்லை, அடுத்து பரங்கிமலை ஸ்டேஷன். அது வேளச்சேரி அளவிற்கு பெரியதல்ல என்பதால் அது அங்கிருந்து நீட்டிக்கப் படலாம்.

வேளச்சேரி – பிருங்கிமலை இடையே கடந்த 11ம் தேதி பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் தொடங்கி வைக்கப்படவில்லை.. தற்போது தற்காலிக அனுமதிச் சான்றிதழ் கிடைத்துள்ளதால், மார்ச் 14 அன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பிருங்கிமலை வரை எத்தனை ரயில் சேவை, வேளச்சேரி வரை எத்தனை ரயில் சேவைகள், வேளச்சேரி -பிருங்கிமலை இடையே எத்தனை ரயில் சேவைகள் என்பது குறித்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழித்தடத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் சவால்களைக் கடந்து பணிகள் முடிக்கப்பட்டது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரயிலை இயக்கி பாதுகாப்பு சோதனை செய்தார். அதற்கு முன்பாக சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தற்போது அனைத்து சோதனைகளும் முடிந்து, தற்காலிக பாதுகாப்புச் சான்றிதழ் கிடைத்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மார்ச் 5 அன்று புதிய பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் திருப்தி அடைந்த அவர், மார்ச் 11 அன்று இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தற்காலிக அனுமதியை வழங்கினார். இதன்படி தொடக்கத்தில் ரயில்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் குடிநீர் வசதி போன்ற சில பணிகளை வரும் மே 15-க்குள் முடிக்க நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது. எனவே இந்த ரயில் நிலையங்களில் நிறுத்தம் பின்னர் வரும்.

இதுவரை சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் வேளச்சேரியுடன் நின்றுவிடும். இனி வேளச்சேரி வழியாக பிருங்கிமலை வரை நீட்டிக்கப்படும். அதேபோல் பிருங்கிமலையிலிருந்து ரயில்கள் கடற்கரைக்குத் திரும்பும். எனவே பயணிகள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பிருங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடியும்.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் மக்கள் இனி பஸ் அல்லது ஆட்டோவை நம்பி இருக்காமல் நேரடியாக எழும்பூர் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயில்களைப் பிடிக்க பிருங்கிமலைக்கு போக முடியும். அதேபோல் பிருங்கிமலையில் பறக்கும் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என மூன்றுமே ஒரே இடத்தில் சந்திப்பதால் பயண நேரம் பெருமளவு குறையும். வேளச்சேரி-விமான நிலையம் செல்லும் உள்வட்டச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories