
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த 14 7 2025 அன்று கும்பாபிஷேகம் அவிட்டம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று அவிட்ட நட்சத்திரம் வருவதால் இன்று வருடாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை திருக்கோயிலின் வைகாசி விசாக குறடியில் மூன்று கலசங்கள் 7 சிறிய கலசங்கள் வைக்கப்பட்டு வருடாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதன் பின்பு இன்று மாலை 3.30 மணிக்கு கடம் புறப்பாடு ஆகி சிவபெருமானுக்கும் முருகபெருமானுக்கு கோவனத்தின அம்பிக்கைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு
சிறப்பு பூஜை செய்யப்பட்டது . விழா ஏற்பாடுகளை , நிர்வாகம் செய்து வருகிறது.



