- உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியது.
- பலியானோர் எண்ணிக்கை 3,77,152 ஆக உள்ளது.
- இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 29 லட்சம்.
- 53,407 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர்..
இந்தியாவில் கொரோனா தொற்று:
- பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரிப்பு.
- குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்வு.
- உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரிப்பு.
- கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதை அடுத்து நாட்டில் கொரோனா உறுதிப் படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகம் ஜூன் 2 செவ்வாய்க்கிழமை இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி….
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர்
மாநில வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் பட்டியலில், மகாராஷ்டிரா உச்சபட்ச பாதிப்புடன் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
மஹாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அங்கு 2,362 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்து தமிழகத்தில், 23,495 பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். 184 பேர் உயிரிழந்துள்ளனர்.
தில்லியில் 20,834 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 523 பேர் உயிரிழந்துள்ளனர். அது போல், குஜராத்தில் 17,200 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. அங்கு 1,063 பேர் உயிரிழந்துள்ளனர்.