- விஜயவாடாவில் ரசாயனம் வெடித்த சம்பவம்.
- கண் மூடி திறக்கும் நேரத்திற்குள் காற்றில் பறந்து விழுந்த தந்தை-மகன் உடல்கள்.
விஜயவாடா அருகில் வெடிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
கன்னவரம் மண்டலம் சூரப்பல்லி தொழிற்சாலை ஏரியாவில் உள்ள ஜெயராம் பிளைவுட் கம்பெனிக்கு விஜயவாடாவில் இருந்து ஸ்க்ராப் மெட்டீரியல் வாங்குவதற்காக தந்தையும் மகனும் சூரப்பல்லி வந்தார்கள்.
இருவரும் டப்பாக்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகிலேயே மேலும் இருவர் கூட இருந்தார்கள். தந்தையும் மகனும் தம் வேலையில் மூழ்கி இருக்கும்போது ஒரேடியாக டப்பாக்கள் வெடித்துச் சிதறின.
வெடித்த அதிர்ச்சியில் இறந்த உடல்கள் காற்றில் பறந்து 50 அடி தூரத்திற்கு சென்று விழுந்தன. கண்மூடி திறக்கும் நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இந்த காட்சி முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.