இஸ்ரோ வியாழன் நேற்று இரவு மைரோசார்-ஆர் மற்றும் கலாம்சாட் என இரு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. மாணவர்களால் தயாரித்த ஆய்வு நோக்கிலான குறைந்த கால ஆயுள் கொண்ட செயற்கைக் கோள் கலாம்சாட்.
இவற்றை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவில், திறமைசாலிகளான இந்திய மாணவர்கள் வடிவமைத்த கலாம்-சாட் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாகப் பாய்ந்துள்ளது. புவிசுற்று வட்டப் பாதையில் ராக்கெட்டின் 4வது நிலையை பயன்படுத்தி செயற்கைக்கோளை செலுத்தி நிலைநிறுத்திய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுள்ளது. விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.