நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரன் சந்திரகுமார் போஸ் புதன் கிழமை அன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்
சந்திரகுமார் போஸ் பாஜக சார்பில் தெற்கு கொல்கத்தா தொகுதியில் போட்டியிடுகிறார்! அவர் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சென்ற பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்
புதன்கிழமை அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சென்றார். அப்போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் அவர் கடுமையாக காயமடைந்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்த போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து தாக்குவதற்காக வெளியில் வந்தார்கள். அவர்கள் எங்களை தாக்கியபோது போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்
அப்போது உடன் வந்திருந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து எங்களைக் காத்தனர்! அவர்கள் தடுத்திரா விட்டால் நாங்கள் கொல்லப்பட்டு இருப்போம் என்று கூறினார்
2019 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பல்வேறு பாஜக.,வினரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்
டம் டம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சமிக் பட்டாச்சாரியா, கோல்கத்தா வடக்கு புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர், சந்திரன் ராய், பாஜகவின் ஹூப்ளி தொகுதி வேட்பாளர் லோகேஷ் சட்டர்ஜி ஆகியோரும் இந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டவர்களில் அடங்குவர்
மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக தாக்குதல்கள் நடத்தப் படுவதால் 194 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது மூன்று மக்களவைத் தொகுதிகளில் உள்ள 5000 பூத்துகளில் 80 சதவிகிதம் பூத்களை பாதுகாக்கும் பொருட்டு 194 கம்பெனிகள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளன!