Home சற்றுமுன் தங்கம் விலை உச்சம்; சவரண் ரூ.33 ஆயிரத்தைத் தாண்டியது!

தங்கம் விலை உச்சம்; சவரண் ரூ.33 ஆயிரத்தைத் தாண்டியது!

  • தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.4100 ஆக உயர்ந்தது
  • இன்று மாலை மேலும் 66 ரூபாய் அதிகரித்து ரூ.4166 ஆக உயர்ந்தது
  • தங்கம் ஒரு சவரன் விலை தற்போது ரூ.33,328-க்கு விற்பனை

கொரோனா வைரஸ் பரவி வருவதால், பங்குச் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து வருகின்றன. இதனால், தங்கத்தின் மீது முதலீடுகள் செய்யப்படுகின்றன. எனவே, தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிப். 24 இன்று ஒரே நாளில் சவரன் ரூ.752 உயர்ந்துள்ளது.

தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.94 உயர்ந்து ரூ.4166க்கும், சவரன் ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.43,740க்கும் விற்பனை செய்யப் படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version